மேலும் அறிய

பள்ளி மாணவி உட்பட 2 பெண்கள் கடத்தல் - போலீசுக்கு தண்ணி காட்டிய மன்மத ஆசிரியர் மணிமாறன் கைது

2 பெண்களை கடத்தை சென்ற ஆசிரியர் மணிமாறனை கடந்த 8 மாதங்களாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (40). அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வந்த இவர், திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் A to Z என்ற நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்தார். இந்த ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக ஆசிரியர் பணியில் இருந்து மணிமாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கிருந்த மணிமாறன் நடன ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு ஜீலை மாதம் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வந்த மணிமாறனை காவல் துறையினர் தேடி வந்தனர். 


பள்ளி மாணவி உட்பட 2 பெண்கள் கடத்தல் - போலீசுக்கு தண்ணி காட்டிய மன்மத ஆசிரியர் மணிமாறன் கைது

 

இதன் இடையே சிறுமியுடன் மணிமாறன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரத்தில் வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி போல தங்கி இருந்துள்ளார். அப்போது தான் தங்கிருந்த வீட்டு உரிமையாளரின் 19 வயது மகளையும் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தலைமறைவானார். சிறுமி உட்பட இருவருடன் ஆசிரியர் மணிமாறன் தலைமறைவான நிலையில், கோவை மற்றும் கன்னியாகுமரியில் காவல் துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இருந்த நிலையில், அடுத்தடுத்து இரு பெண்களை மணிமாறன் கடத்தி சென்றது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்டது குறித்து மணிமாறன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு 8 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி இளம் பெண் தனது வீட்டியினரை தொடர்பு கொண்டு தாங்கள் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதாகவும், தங்களை டீ விற்க வைத்து மணிமாறன் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அழுதுள்ளார். தங்களது சூழல் குறித்து தொலைபேசி மூலம் அப்பெண் தெரிவித்த நிலையில், அவர்கள் ஆந்திராவில் இருப்பது தனிப்படை காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து செல்போன் எண்  மூலம் இருப்பிடத்தை கண்டறிந்த காவல் துறையினர் திருப்பதியில் முகாமிட்டு, இரண்டு இளம் பெண்களுடன் தலைமறைவாக இருந்த ஆசிரியர் மணிமாறனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சிறுமி உட்பட இரண்டு இளம் பெண்களையும் காவல் துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிமாறனை கோவை அழைத்து வந்த தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget