மேலும் அறிய

புதுக்கோட்டையில் திருடனை விரட்டி பிடித்த பொதுமக்கள்- போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளில் ஒருவர், அதிகாலை நேரத்தில் எழுந்து, வீட்டை திறந்து வெளியில் வந்துள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் எகிறி குதித்து ஓடுவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சத்தம் போட்ட அவர் சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்களை எழுப்பி இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து எகிறி குதித்து ஓடுவதை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை அவர்கள் பார்த்து உள்ளனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டை நோட்டமிடுவதும், அதன் பின்னர் வீட்டின் சுவரை ஏறி குதிப்பதும் அதில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த இரண்டு மர்ம நபர்களையும் தேடி வந்த நிலையில் அந்த இருவரும் அதிகாலையில் சுவர் ஏறிகுதித்த அதே உடையில் ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் அதே இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த போது அவர்களை அடையாளம் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து அந்த இருவரையும் விரட்டி சென்றுள்ளனர்.


புதுக்கோட்டையில் திருடனை விரட்டி பிடித்த பொதுமக்கள்- போலீஸ் விசாரணை

மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் பொதுமக்கள் விரட்டி வருவதைப் பார்த்து இருசக்கர வாகனத்தில் வேகமாக புதுக்கோட்டை சாலையில் சென்றுள்ளனர். ஆலங்குடி அடுத்த அம்புலி ஆறு பாலம் அருகே நிலை தடுமாறி விழுந்துள்ளனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடும்போது பொதுமக்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் விரட்டி பிடித்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை ஆலங்குடிகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிசிடிவி கேமிரா பதிவும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இரண்டு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோயமுத்தூர் மாவட்டம் கள்ளுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சிவப்பிரகாசம் (வயது 31) என்பதும் , நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரக்கார் ராமர் மகன் பிரசாந்த் (வயது 24) என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் வந்த இருசக்கர வாகனம் ஈரோடு மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது.

மேலும் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால், முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் போலீசாரிடம் எழுந்ததால், அது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, இருவரும் புதுக்கோட்டை கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆலங்கு டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
Embed widget