மேலும் அறிய

தொழிலாக மாறிப்போன வெடிகுண்டு சேகரிப்பு.. ஆபத்தை உணராத மக்கள்.. தீர்வு எப்போது ?

சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் செயல்படுத்த வரும், துப்பாக்கிச் சூடு மையத்தில் சிதறி கிடைக்கும் வெடிகுண்டுகளை சேகரிக்கும் பொதுமக்கள்.

செங்கல்பட்டு அருகே ராணுவம் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் கிடைக்கும், ராக்கெட் லாஞ்சர் உதிரிபாகங்களை சேகரித்துக் சேகரித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென வெடித்ததால், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் .

அனுமந்தபுரம் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம்

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ஆர்.பி. எப் ,சி.ஆர்.பி.எப் உள்ளிட்ட மத்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் ஆகியவர்களை இலக்குகளை நோக்கி சுட்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய, ராணுவ பயிற்சி மையமாக இந்த பயிற்சி மையம் இருந்து வருகிறது.


தொழிலாக மாறிப்போன வெடிகுண்டு சேகரிப்பு.. ஆபத்தை உணராத மக்கள்.. தீர்வு எப்போது ?

இதில் 100 மீட்டர் 200 மீட்டர் 300 மீட்டர் 500 மீட்டர் வரை பல்வேறு வகையான துப்பாக்கியால் , சுட்டு ராணுவத்தினர் பயிற்சி மேற்கொள்வார்கள். இதில் இரண்டு கிலோ மீட்டரில் இருந்து சுடும் ராக்கெட் லாஞ்சர்கள் மலையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க தாக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்கள், இலக்கை தாக்கி பிறகு காட்டுப்பகுதியில் சிதறி கிடக்கும். 

சிறு பணத்திற்காக ஆசைப்படும் மக்கள்

இதுபோன்ற ராக்கெட் லாஞ்சர்களின், அதனுடைய அலுமினியம் பித்தளை போன்ற உதிரி பாகங்கள் சிதறி கிடக்கும். இவற்றை பழைய பொருட்கள் வாங்கும் கடையில், கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதால், இப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றை துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகு பொறுக்கிச் செல்கின்றனர் .தொழிலாக மாறிப்போன வெடிகுண்டு சேகரிப்பு.. ஆபத்தை உணராத மக்கள்.. தீர்வு எப்போது ?

இந்தநிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ராக்கெட் லாஞ்சர் கொண்டு செல்லும்போது, அது கீழே விழுந்து வெடித்ததில், மூதாட்டி உள்ளிட்ட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் (வயது 52 ) என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்துச் சென்று தான் வைத்திருந்த கத்தியால் உடைத்த போது, அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பலத்த காயம் அடைந்த கோதண்டத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொழிலாக மாறிப்போன வெடிகுண்டு சேகரிப்பு.. ஆபத்தை உணராத மக்கள்.. தீர்வு எப்போது ?

சட்டப்படி குற்றம்

இதுகுறித்து மறைமலைநகர் காவல் துறையிடம் விசாரணை மேற்கொண்ட போது , இது ராணுவத்திற்கு சொந்தமான பொருள் இதை யாரும் எடுத்துச் சொல்லவோ அல்லது பொறுக்கிச் செல்லவா கூடாது. அப்படி செய்தால் தேசிய வெடிமருந்து சட்டத்திற்கு அவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிவித்தனர். ஆனால் இப்பகுதியில் உள்ள மக்கள் அறியாமையின் காரணமாக இதை எடுத்துச் செல்வதாலும், இதை வைத்திருக்கக் கூடாது என்று தெரியாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விழிப்புணர்வு அவசியம் 

ராணுவ வீரர்கள் இதுபோன்று சிறிய ரி ராக்கெட் லாஞ்சல்களை, வைத்து பயிற்சி மேற்கொள்ளும் பொழுது சில சமயம் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்திருக்கிறது. பயிற்சி முடிந்த பிறகு சில காலம் அப்பகுதியில் ராணுவ வீரர்கள் யாரும் வரமாட்டார்கள் என்பதால், ஆடு, மாடு மேய்க்க செல்பவர்கள் கீழே கிடைக்கும் பொருட்களை சேகரித்து பழைய இரும்பு கடையில் போட்டு பணம் பார்ப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே இப்பகுதி மக்களுக்கு , வெடிக்கக் கூடிய அபாயம் இருக்கும் பொருள் என்பதால் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து அப்பகுதி மக்களுக்கு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget