மேலும் அறிய

Crime: சின்னத்திரை நடிகர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு

நிலத்தகராறில், சின்னத்திரை நடிகர் உள்பட 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். வெறிச்செயலில் ஈடுபட்ட விவசாயியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூரை சேர்ந்தவர் கருப்பையா (50). சின்னத்திரை நடிகர். இவர் வாணி,ராணி சீரியலில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமான நிலம், திண்டுக்கல் அருகே சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ளது. அங்கு தங்கியிருந்து, கருப்பையா விவசாயம் செய்து வருகிறார். சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (52). இவர் அதேபகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவரும், கருப்பையாவும் நண்பர்கள்.

Crime: சின்னத்திரை நடிகர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் தனபால் (50). விவசாயி. இவர், சிறுமலை அகஸ்தியர்புரத்தில் நிலம் வாங்கி அங்கேயே தங்கியிருந்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபாலிடம், கருப்பையா 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். இந்த நிலத்தை அளவீடு செய்தபோது, 4½ ஏக்கர் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் தனபாலிடம் ½ ஏக்கர் நிலத்துக்கான பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

Crime: சின்னத்திரை நடிகர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு

இந்தநிலையில் நேற்று அகஸ்தியர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனபால் இருந்தார். அப்போது கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது ½ ஏக்கர் நிலத்துக்கான பணத்தை தனபாலிடம் அவர்கள் மீண்டும் கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த தனபால், வீட்டுக்குள் சென்று நாட்டு துப்பாக்கியுடன் வெளியே வந்தார். பின்னர் அவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனைக்கண்ட கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் சுதாரிப்பதற்குள் கருப்பையா மீது, துப்பாக்கியால் தனபால் சரமாரியாக சுட்டார். இதில் கருப்பையாவின் வயிறு, கை மற்றும் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதை தடுக்க முயன்ற ராஜாக்கண்ணுவும் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது.


துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், தனபால் வீடு நோக்கி ஓடி வந்தனர். அங்கு கருப்பையா ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கருப்பையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜாக்கண்ணுவுக்கு சிறுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் புறநகர்  காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபாலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அது உரிமம் இல்லாத துப்பாக்கி என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் சின்னத்திரை நடிகர் உள்பட 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் சிறுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget