Crime: பரங்கி மலையில் கல்லூரி மாணவி படுகொலை : கொலையாளி சதீஷ் கைது.. பெண்ணின் தந்தை அதிர்ச்சியால் மரணம்..
சென்னை பரங்கிமலை ஓடும் ரயில்முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷை தனிப்படையினர் கைது செய்தனர்.

சென்னை பரங்கிமலை ஓடும் ரயில்முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷை தனிப்படையினர் கைது செய்தனர்.
ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், அதே பகுதியில் சத்யா என்ற மாணவியை ரயிலில் தள்ளி விட்டு நேற்று தப்பியோடினார். சதீஷ் தள்ளிவிட்டதால் ரயிலில் சிக்கிய மாணவி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ரயில்வே போலீஸ் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையம் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தேடப்பட்ட வந்த நிலையில், தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சத்யாவின் தந்தை மாணிக்கம் மாரடைப்பால் காலமானார். மகள் சத்யா கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில் அவரது தந்தை மாணிக்கம் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மகள் சத்யா உடல் வைக்கப்பட்டிருக்கும் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே தந்தை மாணிக்கம் உடலும் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன..?
டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.
டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

