மேலும் அறிய

மாமனார் கடத்தல்! 2 திருமணம் ஆனதை மறைத்து அக்கா, தங்கையை கல்யாணம் செய்த நபர் - நடந்தது என்ன?

ஏற்கனவே 2 திருமணம் ஆனதை மறைத்து அக்கா மற்றும் தங்கையை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூரில் அமைந்துள்ளது அம்பேத்கர் தெரு. இங்கு வசித்து வருபவர் சாமுவேல். இவருக்கு வயது 55. இவருக்கு சோனியா, சொர்ணா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் வயது 23 ஆகும். அக்காள், தங்கையான இவர்கள் இருவரும் ஆழ்வான் ( வயது 35) என்ற நபரை திருமணம் செய்துள்ளனர்.

மாமனாரை கடத்திய மருமகன்:

இந்த நிலையில், அக்காள் தங்கையான இவர்கள் இருவரும் கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தங்களது கணவனான ஆழ்வான் தங்களது தந்தை சாமுவேலை கடத்தி மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அளித்த புகாரையடுத்து, போலீசார் செல்போன் சிக்னல் அடிப்படையில் மாதவரம் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சாமுவேலை மீட்டனர். பின்னர் ஆழ்வானை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியானது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆழ்வான். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் சோனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு சோனியா கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, அவர் சோனியாவை கவனித்துக் கொள்வதற்காக சொர்ணா சென்றுள்ளார்.

அக்காள் - தங்கையுடன் திருமணம்:

அப்போது, சோனியாவை கவனித்துக் கொள்ளச் சென்ற சொர்ணாவிற்கும் ஆழ்வானுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மனைவி சோனியாவிற்கு தெரியாமல் ஆழ்வான் சொர்ணாவை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த சோனியா அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் உடன்பிறந்த தங்கை என்பதால் இதை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், ஆழ்வான் திருவள்ளூர் வேப்பம்பட்டில் தனித்தனியாக வீடு எடுத்து இருவரையும் தங்க வைத்துள்ளார்.

ஆழ்வானுக்கு முறையான வேலை இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், மதுப்பழக்கமும் இருந்துள்ளது. இதனால், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஆழ்வான் முறையாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், அக்காள் தங்கை இருவருக்கும் ஆழ்வானுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, சோனியாவும், சொர்ணாவும் தங்களது தந்தை வீட்டிற்கு கோபித்துச் சென்றனர். ஆழ்வான் பல முறை அவர்கள் இருவரையும் அழைத்துள்ளார். ஆனால், அக்காள் - தங்கை இருவரும் வர மறுத்துவிட்டனர்.

ஏற்கனவே 2 திருமணம்:

இதனால், மாமனார் சாமுவேலை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுபோல அழைத்து மது வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், அவரை மாதவரத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் அடைத்துள்ளார். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ஆழ்வான் சோனியாவை திருமணம் செய்வதற்கு முன்பே இரண்டு பெண்களை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ஆழ்வான் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 திருமணமானதை மறைத்து அக்காள் தங்கையை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: பெரியகுளம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

மேலும் படிக்க: IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை - என்னாச்சு?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget