மேலும் அறிய

தந்தையை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற மகன்! மொட்டை அடித்து தலைமறைவாக சுற்றியது அம்பலம்..!

சென்னை, வளசரவாக்கத்தில் பெற்ற தந்தையை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த மகன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னை வடபழனியை அடுத்து அமைந்துள்ளது வளசரவாக்கம். இந்த பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வசித்து வந்தவர் குமரேசன். அவருக்கு வயது 78. இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இந்த நிலையில், இவர் திடீரென மாயமாகியதாக இவரது மகள் அளித்த புகாரின் பேரில் குமரேசனை தேடியபோது அவரது சொந்த மகனே அவரை துண்டு, துண்டாக வெட்டிக்கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தந்தையை கொலை செய்த மகன் குணசேகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் குணசேகரன் சரண் அடைந்தார். அவர் மொட்டை அடித்து காணப்பட்டார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தந்தை கொலை செய்து புதைத்தபிறகு போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மொட்டை அடித்து தலைமறைவாக திரிந்து வந்தார் என்று தெரியவந்துள்ளது.


தந்தையை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற மகன்! மொட்டை அடித்து தலைமறைவாக சுற்றியது அம்பலம்..!

இதையடுத்து, நீதிமன்றத்தில் சரணடைந்த குணசேகரனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்னதாக குமரேசன் மாயமாகியபோது அவரை அவரது மகள் காஞ்சனமாலாவுடன் சேர்ந்து தேடுவது போல நடித்த குணசேகரனும் திடீரென மாயமானார். இதையடுத்து, வீட்டின் உள்ளே நன்றாக தேடிப்பார்த்த காஞ்சனமாலா வீட்டின் உள்ளே ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டார்.

இதையடுத்து, காஞ்சனா மாலா அளித்த புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் குணசேகரன் வீட்டின் உள்ளே இருந்து ஒரு பேரலை எடுத்துக்கொண்டு சென்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட காவேரிப்பாக்கத்தில் உள்ள காலிமனையில் புதைத்தது தெரியவந்தது. குணசேகரன் புதைத்த இடத்தில் இருந்த பேரலை தோண்டி எடுத்த போலீசார் அதில் குமரேசன் சடலமாக, அதுவும் துண்டு, துண்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தந்தையை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற மகன்! மொட்டை அடித்து தலைமறைவாக சுற்றியது அம்பலம்..!

சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு குமரேசனை குணசேகரன்தான் கொலை செய்திருப்பார் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடுவதற்காக உதவி ஆணையர் கலியன், காவல் ஆய்வாளர் குரூஸ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், குணசேகரன் தானே வந்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். 

இதையும் படிங்க: Two Thousand Rupee : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறதா ரிசர்வ் வங்கி? என்ன காரணம்? அறிக்கை சொல்வது என்ன?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget