மேலும் அறிய

Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

குடித்துவிட்டு தினமும் தகராறு செய்த கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, மகள் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மதுரவாயல் அடுத்து அமைந்துள்ளது ஆலப்பாக்கம். இங்குள்ள கோவிந்தப்பன் நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். அவருக்கு வயது 59. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், திடீரென அவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி வசந்தா மதுரவாயல் போலீசாருக்கு உடனே தகவல் அளித்தார். வசந்தா அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் ராஜேந்திரனின் கழுத்தை யாரோ கயிற்றால் இறுக்கியதாக தெரியவந்துள்ளது.


Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

இதனால், போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் ராஜேந்திரன் குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவரது குடும்பத்தினர் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனால், தீவிர சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அவர்களின் விசாரணையின் அடிப்படையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ராஜேந்திரன் நடவடிக்கையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவரது குடும்பத்தினர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். ராஜேந்திரனின் மனைவி வசந்தா, அவரது மகள் ராஜேஸ்வரி மற்றும் மருமகன் பிரதாப் ஆகிய மூன்று பேரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்துள்ளனர்.


Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், மதுபோதையில் தகராறு செய்துள்ளார். ஏற்கனே ராஜேந்திரனை கொலை செய்ய தயாராக இருந்த வசந்தாவும், பிரதாப்பும் தாங்கள் தயாராக வைத்திருந்த கயிற்றால் ராஜேந்திரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர், ராஜேந்திரனின் உடலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டது போல தொங்கவிட்டுள்ளனர்.

ராஜேந்திரனை மனைவி வசந்தாவும், மருமகள் பிரதாப்பும் கொலை செய்தபோது அவரது மகள் ராஜேஸ்வரி யாரும் உள்ளே வராதபடி காவல் காத்து நின்றுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மருமகனும் கொலை செய்ய மகள் காவல் காத்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget