![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: காதல்.. நிச்சயதார்த்தம்.. ஆபாசபடங்கள்.. வீடியோவை வைத்து மிரட்டியதாக சென்னை பெண் பகீர் புகார்..
நட்சத்திர ஹோட்டலில் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் சென்னை போலீஸ் காவல் நிலையத்தில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
![Crime: காதல்.. நிச்சயதார்த்தம்.. ஆபாசபடங்கள்.. வீடியோவை வைத்து மிரட்டியதாக சென்னை பெண் பகீர் புகார்.. Chennai: Man blackmails women with her abuse physical intimacy video after held an engagement with her Crime: காதல்.. நிச்சயதார்த்தம்.. ஆபாசபடங்கள்.. வீடியோவை வைத்து மிரட்டியதாக சென்னை பெண் பகீர் புகார்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/15/e66e90b9dedcff592610b231d330ecd1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நட்சத்திர ஹோட்டலில் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் சென்னை போலீஸ் காவல் நிலையத்தில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில், “ நான் எம். ஏ. கம்யூனிகேஷன் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறேன். 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நான், கருத்து வேறுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றுக்கொண்டேன். தற்போது நான் வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறேன்.
பேஸ்புக் மூலம் அறிமுகம்
கடந்த 2020 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் விக்ரம் வேதகிரி என்பவர் என்னிடம் அறிமுகமானார். அவர் என்னிடம் சொந்தமாக மருந்து கம்பெனி வைத்திருப்பதாகவும், தான் திருநின்றவூரில் சொந்த வீட்டில் வசித்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து விக்ரம் அவரது மாமா வீட்டிற்கு அழைத்து சென்று என்னை அறிமுகப்படுத்தினார்.
காதல் மலர்ந்தது
கடந்த 2021-ஆம் தேதி காதலர் தினத்தன்று பேஸ்புக் லைவ் மூலம் தனது காதலை என்னிடம் சொன்னார். ஆரம்பத்தில் அவரது காதலை நான் ஏற்காத நிலையில், என்னிடம் கெஞ்சி கூத்தாடி பின்னர் காதலிக்க வைத்தார். இதனையடுத்து நாங்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஹைதராபாத் டூர் சென்றோம். அங்குள்ள ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்டில் தனியாக இருந்த என்னை விக்ரம் ரகசியமாக தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து என்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டார்.
நான் விவாகரத்து ஆனவர் என்ற விபரம் விக்ரம் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவருக்குத்தேவையான பண உதவிகளை நான் கவனித்து வந்தேன். அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் என் தாயார், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டாம்.
மோசமாக மாறிய செயல்பாடுகள்
ஆனால் அதன் பின்னர் அவரது செயல்பாடுகள் மோசமாக மாறியது. என்னிடம் அடிக்கடி செக்ஸ் பற்றிய பேசிய விக்ரம், செக்ஸ் வீடியோக்களில் வருவதை போலவே செயல்பட வேண்டுமென வற்புறுத்தினார். அப்போது அவர் சொல்வது போலவே உடை அணிய வைத்து தொந்தரவு செய்தார். அதுமட்டுமல்ல, ஓட்டலில் தங்கி ஆபாச உடை அணிந்து அவர் விருப்பப்படி ஆபாச வீடியோவில் வீடியோவில் ஜோடியாக நடிக்க வாட்ஸ் ஆப் மூலம் என்னை தொடர்பு கொண்டார்.
அவரது நடவடிக்கைகள் இப்படி சென்று கொண்டிருக்க, கடந்த மார்ச் 5 ஆம் தேதி 10 லட்சம் பணம் தரவேண்டும் என்றும் இல்லை என்றால் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் மார்பிங் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று இனி என் வாழ்கையில் தலையிட கூடாது என்றும் மிரட்டிவிட்டு சென்றார். இது குறித்து வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இதனிடையே வரும் 17-ஆம் தேதி தி. நகரில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்தது. ஆதலால் விக்ரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)