மேலும் அறிய

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் காதில் கத்தரிக்கோலால் குத்திய கணவன்

’’மனைவி இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்ததால் பயந்து போன பிரபாகரன் உடனடியாக வியாசர்பாடி  காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்’’

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49 வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (50). இவர் பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பிரபாகரன் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49ஆவது பிளாக் பகுதியில் இந்திராணி நடத்தி வரும் சிறிய அளவிலான தையல் கடைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு அவருடன் சண்டையிட்டு உள்ளார்.
 


நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் காதில் கத்தரிக்கோலால் குத்திய கணவன்
 
மேலும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்துள்ளார்.  அப்போது மது போதையில் இருந்த பிரபாகரன் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து இந்திரானின் காதில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்க மடைந்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் இந்திராணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்ததால் பயந்து போன பிரபாகரன் உடனடியாக வியாசர்பாடி  காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். வியாசர்பாடி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திராணியிடம் புகாரை பெற்றுக் கொண்டு பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

 
வியாசபாடியில் முழு லாக்டவுனில் மதுபானம் விற்ற நபர் கைது

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் காதில் கத்தரிக்கோலால் குத்திய கணவன்
 
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு நடை முறையில் இருந்து வருவதால் அன்றைய தினம் மது பான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர்  மதுபாட்டில்களை முன் கூட்டியே  வாங்கி வைத்துக்கொண்டு அதனை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். போலீசாரும் அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் வியாசர்பாடி பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று வியாசர்பாடி ஜே.ஜே .ஆர் நகர் 5 ஆவது தெரு பகுதியில் ஒரு வீட்டில் திடீரென்று உள்ளே நுழைந்து சோதனை செய்த போது அங்கு சுமார் 30 மதுபாட்டில்கள் மற்றும் 8 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பொருட்களை கைபற்றிய போலீசார் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வந்த தமிழ் ராஜ் வயது 44 என்ற நபரை கைது செய்தனர்.  அவர் மீது வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget