மேலும் அறிய

Crime : ரவுடிகளை ஜாமினில் எடுத்த தாய்மாமா! நடுரோட்டில் ஓடஓட வெட்டிய கும்பல்! சென்னையில் பயங்கரம்!

சென்னை, திருவல்லிக்கேணியில் பிரபல ரவுடிகளின் தாய்மாமனை பட்டப்பகலில் மர்மகும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது மாட்டாங்குப்பம். இந்த பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் வினோத் மற்றும் பாலாஜி. இவர்களது தாய்மாமன் ராஜா. இவர் திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் 3வது தெருவில் வசித்து வருகிறார்.அவருக்கு வயது 49. ராஜா அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஓட்டுனராக மட்டுமின்றி அவரது வீட்டின் அருகே சிறிய உணவகமும் நடத்தி வருகிறார்.

வினோத் மற்றும் பாலாஜி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ராஜா மீதும் அடிதடி வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. வினோத் மற்றும் பாலாஜி இருவரும் சிறைக்கு சென்றால் அவர்கள் இருவரையும் ராஜாதான் ஜாமீனில் எடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக, வினோத், பாலாஜியின் விரோதிகளுக்கு ராஜா மீது பகை இருந்து வந்துள்ளது.



Crime : ரவுடிகளை ஜாமினில் எடுத்த தாய்மாமா! நடுரோட்டில் ஓடஓட வெட்டிய கும்பல்! சென்னையில் பயங்கரம்!

அதே நேரத்தில், ராஜா புதியதாக தொடங்கிய உணவகத்தை நடத்துவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிலருக்கும், ராஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே உள்ள பாரதி சாலையில் உள்ள பிற்பகல் 2.50 மணியளவில் ராஜா நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.

மேலும் படிக்க : Crime: திருடன் என எண்ணி அடித்துக் கொல்லப்பட்ட காய்கறி வியாபாரி... கும்பல் தாக்குதலால் உயிரிழந்த சோகம்!

இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த ராஜா உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பலும் ராஜாவை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் ராஜா சரிந்து கிடப்பதை அறிந்த ராஜாவின் மனைவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது. ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.


Crime : ரவுடிகளை ஜாமினில் எடுத்த தாய்மாமா! நடுரோட்டில் ஓடஓட வெட்டிய கும்பல்! சென்னையில் பயங்கரம்!

இந்த சம்பவம் குறித்து ஜாம்பஜார் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச்சென்ற 6 பேர் கொண்ட கொலை கும்பலை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணியில் பிரபல ரவுடிகளின் தாய்மாமனை மர்மகும்பல் பட்டப்பகலில் ஓட, ஓட வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.  

மேலும் படிக்க : Crime : உடலுறவுக்கு மறுப்பு.. எப்போதும் செல்போன்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!

மேலும் படிக்க : Chennai Bank Robbery : 'ஜென்டில்மேன் படத்தை 10 முறை பார்த்தேன்..' வங்கி கொள்ளையன் சொன்ன ஷாக் வாக்குமூலம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget