மேலும் அறிய

Crime: பெற்ற மகளுக்கு இழைத்த கொடூரம்.. தற்காப்புக்காக கணவனை கொன்ற பெண்.. நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை..

சென்னையை அடுத்த ஓட்டேரியில் குடிபோதையில் மகளிடம் அத்துமீறிய கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

சென்னையை அடுத்த ஓட்டேரியில் குடிபோதையில் மகளிடம் அத்துமீறிய கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

சென்னையை அடுத்த ஓட்டேரியில் 21 வயது கல்லுாரி மாணவி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி, தம்பியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஜனவரி மாதம் 27ம் தேதி இரவு, அம்மா, தம்பியுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்ததார். 

அப்போது, தூக்கத்தில் இவரிடம் யாரோ அத்துமீறுவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக யார் என்று முழித்து பார்த்தபோது அவரது தந்தையே குடிபோதையில் நிதானமில்லாமல் எல்லை மீறியுள்ளார். அந்த பெண்ணும் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், அவரால் அவரது தந்தையை தடுக்க முடியவில்லை. இதனால் தன்னை யாரேனும் காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார். 

இந்த நிலையில், சத்தம் கேட்டு எழுந்த தாய் தன் கணவரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்து, தன் பங்குக்கு தடுக்க முயற்சி செய்துள்ளார். இது எதுவும் வேலைக்கு ஆகாததால் அருகில் இருந்த கத்தியை எடுத்து, தன் கணவரை தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கணவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி காவல்துறையினர், கணவரை கொலை செய்த மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் : 

இதையடுத்து, ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாணவியின் தாய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, 'மனுதாரரின் கண்முன்னே மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த கணவரின் செயலை தாங்க முடியாமல், ஆத்திரத்தில் ஆயுதத்தால் தாக்கியுள்ளார். திட்டமிட்டு செய்யவில்லை. மகளை காப்பாற்றும் எண்ணத்தில் மனுதாரர் நடந்துள்ளார். எனவே, ஜாமீன் வழங்கலாம். ஆட்சேபனை இல்லை' என்றார்.

இதை ஏற்ற நீதிபதி, 'மகளை பாதுகாக்கும் எண்ணத்தில்தான் மனு தாரர் செயல்பட்டுள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. விசாரணைக்கு தேவைப்படும் நேரத்தில், விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்; தலைமறைவாகக் கூடாது என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது' என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget