மேலும் அறிய

Crime: பதறிய சென்னை புறநகர்...தங்கை கொலைக்கு பழி தீர்த்த அண்ணன்

புதுப்பாக்கம் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த தங்கையை தீயிட்டு கொளுத்தி கொன்ற குற்றவாளி ஜெயிலில் இருப்பதால், பழிக்கு பழி வாங்க 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா (வயது 38). இவரது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிவதால், சுகன்யா புதுப்பாக்கத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன்  தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
 
திருமணத்தை மீறிய உறவு
 
சுகன்யா  புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.  சுகன்யா கடைக்கு அருகில்  மோட்டார் வைண்டிங் மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தவர் பாலாஜி (26). இவருக்கும், சுகன்யாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் சுகன்யாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரிய வந்து இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், பாலாஜியின் தந்தை குமாரும் இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் இரு தரப்பினரின் கண்டிப்பிற்கும் பிறகும், இருவரும் தொடர்பை கைவிடாமல் இருந்து வந்துள்ளனர். 
 
Crime: பதறிய சென்னை புறநகர்...தங்கை கொலைக்கு பழி தீர்த்த அண்ணன்
 
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  7- ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில், சுகன்யாவின் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் சுகன்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தீ விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோது, விசாரணையில் பாலாஜியின் தந்தை குமார் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.
 
பழிவாங்க துடித்த சகோதரன்
 
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அன்றைய தினம் கேளம்பாக்கம் போலீசாரின் விசாரணையில் , சுகன்யாவுடன் பாலாஜியின் தந்தை குமார் ஒருதலைபட்சமாக தொடர்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு சுகன்யா சம்மதம் தெரிவிக்காமல் பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் குமார் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்பொழுது வரை சிறையில் இருக்கும் குமாரை பழி வாங்க முடியாத சூழலில், தங்கை இழப்புக்கு காரணமாக இருந்த குமாரின் மகன் பாலாஜியை,  சுகன்யாவின் அண்ணன் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் சேர்ந்து புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள, பாலாஜியின் ஒர்க் ஷாப் கடை அருகில் வெட்டி படுகொலை செய்துள்ளனார்.
 
திட்டம் தீட்டி கொடூரக் கொலை
 
இதில் பாலாஜிக்கு  தலை, கை, கால், முகம் சிதைக்கப்பட்டு. சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் வண்டலூர் வழியாக தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து அப்பகுதியில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
 
மடக்கி பிடித்த காவல்துறை
 
இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து மைக் மூலமாக காரில் தப்பிச் சென்ற நபர்களை பிடிக்க செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் உள்ள காவல் நிலையத்திற்கு, தகவல் அளிக்கப்பட்டு அந்தந்த டோல்கேட்டுகளில் போலீசார்  சோதனை கொண்டு வந்தனர். இதில் கொலை செய்தவர்கள் வண்டலூர் சாலை வழியாக சென்று அங்கிருந்து  பாண்டிச்சேரி நோக்கி  மதுராந்தகம் வழியாக செல்லும் போது தொழுப்பேடு பகுதியில் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 
 
Crime: பதறிய சென்னை புறநகர்...தங்கை கொலைக்கு பழி தீர்த்த அண்ணன்
 
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யாவின் சகோதரர் ரவி (வயது 42) அவரது கூட்டாளிகள் சரவணன் (வயது 22), ஆனந்த் (வயது 24) அரவிந்த் (வயது 24), திருமாவளவன் (வயது 25), மற்றும் ஸ்டீபன் ராஜ் (வயது 22) ஆகிய ஆறு பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வீச்சருவாள் காரை பறிமுதல் செய்தனர். தன் தங்கையை கொலை செய்ததால் பழிக்கு பழி வாங்க நடைபெற்ற கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
Embed widget