மேலும் அறிய

Crime: தந்தை கொலைக்கு பழி தீர்த்த மகன்கள்...! தந்தை உயிரிழந்த இடத்தில் மச்சானின் தலையை வெட்டி வைத்த கொடூரம்..!

"தந்தை கொலை செய்யப்பட்ட இடத்திலேயே மச்சானை கொலை செய்து அவருடைய தலையை வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது"

பிரபல சாராய வியாபாரி
 
செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம்(65), இவரது மனைவி சம்பூர்ணம்(58), இவர்களுடைய மகள் ஜெயந்தி (30). இவர்களுடைய மகளை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு, பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் டார்ஜன் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
 
டார்ஜன் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமான சில வருடங்களில் சாராய வியாபாரத்தை கைவிட்டு விட்டு, கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்து உள்ளனர்.
Crime: தந்தை கொலைக்கு பழி தீர்த்த மகன்கள்...! தந்தை உயிரிழந்த இடத்தில் மச்சானின் தலையை வெட்டி வைத்த கொடூரம்..!
மனைவியை துன்புறுத்திய கணவன்
 
டார்ஜன், தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி உள்ளார். அடிக்கடி ஜெயந்தியை பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.  அதே பகுதி என்பதால் ஜெயந்தியின் தாய், தந்தை இருவரும் டார்ஜனை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி இரவு போதை தலைக்கு ஏறிய டார்ஜன், தனது மாமனார் துலுக்காணம் மற்றும் மாமியார் சம்பூர்ணம் ஆகிய இருவரை சரமாரியாக கட்டை மற்றும் வீட்டில் இருந்த கத்தி ஆகியவற்றை வைத்து தாக்கியுள்ளார்.

Crime: தந்தை கொலைக்கு பழி தீர்த்த மகன்கள்...! தந்தை உயிரிழந்த இடத்தில் மச்சானின் தலையை வெட்டி வைத்த கொடூரம்..!
 
போதையில் மாமனாரை கொலை செய்த மருமகன்
 
இதில் துலுக்கானோம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சம்பூர்ணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த கொலைக்கு வழக்கில் கடந்த 8 மாதங்களுக்கு முன் டார்ஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Crime: தந்தை கொலைக்கு பழி தீர்த்த மகன்கள்...! தந்தை உயிரிழந்த இடத்தில் மச்சானின் தலையை வெட்டி வைத்த கொடூரம்..!
 
மச்சானை போட்டுத்தள்ளிய மகன்கள் 
 
டார்ஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்த செய்தி அறிந்த துலுக்கானத்தின் மகன் சூர்யா வயது 25 மற்றும் துலுக்கானதத்தின், தம்பி மகன் லோகேஷ் வயது 24 ஆகிய இருவரும் பழிக்கு பழியாக நேற்று இரவு வீட்டில் டார்ஜனை சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து தனது தந்தை கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அறிந்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர் கொலையுண்ட டார்ஜன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூர்யா மற்றும் அவரது சகோதரரான லோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை கொன்ற அதே இடத்தில் மைத்துனரின் தலையை மகன்களே பழிக்கு பழியாக வெட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
"அம்மா, அப்பா மிஸ் யூ " எழுதி வைத்த கடிதம் - இளம்பெண்ணுக்கு கலைந்த கிரிக்கெட் கனவு
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Government Formation LIVE: திமுகவுடன் கூட்டணி.. தவெகவுக்கு ஆதரவு.. கூட்டாக அறிவித்த சிபிஎம்-சிபிஐ
Tamil Nadu Government Formation LIVE: திமுகவுடன் கூட்டணி.. தவெகவுக்கு ஆதரவு.. கூட்டாக அறிவித்த சிபிஎம்-சிபிஐ
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Vijay Govt Formation: தவெகவுக்கு ஓகே சொன்ன இடதுசாரிகள்.. முடிவுக்கு வரும் இழுபறி.. ஆட்சியமைக்கும் விஜய்?
Vijay Govt Formation: தவெகவுக்கு ஓகே சொன்ன இடதுசாரிகள்.. முடிவுக்கு வரும் இழுபறி.. ஆட்சியமைக்கும் விஜய்?
Vijay Govt Formation: தவெகவுக்கு கிரீன் சிக்னல்? சிபிஎம் எடுத்த முக்கிய முடிவு... வெளியான தகவல்
Vijay Govt Formation: தவெகவுக்கு கிரீன் சிக்னல்? சிபிஎம் எடுத்த முக்கிய முடிவு... வெளியான தகவல்
TN Politics: தமிழகத்தில் யார் ஆட்சி? - முடிவு எடுக்கப்போகும் 3 கட்சி.. பொன்னான வாய்ப்பு என்னாகும்?
TN Politics: தமிழகத்தில் யார் ஆட்சி? - முடிவு எடுக்கப்போகும் 3 கட்சி.. பொன்னான வாய்ப்பு என்னாகும்?
வாட்ஸப்பில் அனுப்பி ஆதரவு கேட்பதா? தவறாக வழிநடத்தப்படும் விஜய்- வெடித்த விசிக!
வாட்ஸப்பில் அனுப்பி ஆதரவு கேட்பதா? தவறாக வழிநடத்தப்படும் விஜய்- வெடித்த விசிக!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
Embed widget