மேலும் அறிய

இளைஞரை கொலை செய்த தாயின் 2வது கணவர்! - திரைப்படத்தை மிஞ்சிய கொலை சம்பவம்.. நடந்தது என்ன?

மதுராந்தகம் அருகே தாயின் இரண்டாவது கணவர் இளைஞரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தாயின் இரண்டாவது கணவர் இளைஞரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அருணாக்குளம் பகுதி சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவர் பார்த்திபன் அந்த பகுதியில் தெரியும் கூலி வேலைகளை செய்து வருகிறார். பார்த்திபனை தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார். இந்நிலையில் அவரது தாய் இரண்டாவது கணவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. 

இருவருக்கும் அடிக்கடி தகராறு

கோபால் என்பவரும் பார்த்திபனின் தாய் ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதே வீட்டில் பார்த்திபனும் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் பார்த்திபன் மற்றும் கோபால் ஆகிய இருவருக்கும் அவ்வப்போது, கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டு வந்துள்ளனர். சில சமயங்களில் இருவரும் தாக்கி கொள்வதும் வழக்கம் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கோபால் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் சில நேரங்களில் ஒன்றாக மது அருந்துவதையும் வழக்கமாக வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

பார்த்திபனுக்கும் கோபாலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் , இதன் காரணமாக பார்த்திபனின் தாயார் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு சென்னையில் வேலை செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் கோபாலுக்கும் பார்த்திபனுக்கும் இடையே மது குடித்துவிட்டு இரவு நேரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

மரம் வெட்டும் கோடாரியால் கொலை

 இந்தநிலையில் நேற்று அதேபோல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மது போதையில் இருந்த பார்த்திபன் அப்பா கோபாலை சண்டை போட்டு அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபால்

மது போதையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பார்த்திபனை, கோபால் மரம் வெட்டும் கோடாலியால் தலையில் தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். 

போலீசார் தீவிர விசாரணை

இந்த கொலை சம்பவம் தொடர்பாக உடனடியாக அக்கம்பக்கத்தினர் மதுராந்தகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக பார்த்திபனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை மதுராந்தகம் போலீசார் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக கோபாலை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாயின் இரண்டாவது கணவர் இளைஞரை அடித்து கொலை செய்யும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறை சொல்வது என்ன ?

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : முதற்கட்ட விசாரணையில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் மது போதையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். அவரது தன் தாயின் இரண்டாவது கணவர் பார்த்திபனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget