மேலும் அறிய

பெண்ணின் ஆசனவாயில் தங்கச்செயின் ! சிங்கப்பெருமாள் கோயிலில் 5 பெண்கள் கைது - நடந்தது என்ன ?

"செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது" 

சிங்கபெருமாள் கோவிலில் மூதாட்டியிடம் செயின் திருடப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

5 சவரன் தங்கச் சங்கிலி திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் என்பவரது மனைவி பாஞ்சாலி(62). இவர் நேற்று முன்தினம் காலை சிங்கபெருமாள் கோவிலில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தார். கோவில் பிரகாரத்தை சுற்றி முடித்து விட்டு நுழைவு பகுதி அருகில் வழங்கப்பட்ட அன்னதான பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட பின் பார்த்த போது, தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின் காணவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மூதாட்டி கோவில் நிர்வாகிகளிடமும் போலீசாரிடமும் தகவல் தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகள் சிக்கிய ஐந்து பெண்கள்

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் கோவிலில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அன்னதானம் வழங்கும் இடத்தில் 5 பெண்கள் மூதாட்டியை சுற்றி நின்று ஒரு பெண் மட்டும் பாஞ்சாலி கழுத்தில் இருந்த தங்க செயினை கடித்து எடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகள் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு பகிரப்பட்டு அதனடிப்படையில் சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி. சாலையில் போலீசார் தேடிவந்தனர்.

கோயிலை மையமாக வைத்து திருட்டு சம்பவம் 

அப்போது சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 5 பெண்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், பிடிபட்ட பெண்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா தேவி (42) சித்ரா (28) மீனா (31) முத்துமாரி (60) அஞ்சலி (30) என்பதும் இவர்கள் கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கும்பலாக சென்று தங்க நகைகள் அணிந்திருக்கும் பெண்களை குறி வைத்து நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.

ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள்

மேலும் திருடிய நகையை மறைத்து வைத்துவிட்டு நகை இல்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ததில் ஆசனவாயில் பகுதியில் நகையை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகளிர் காவலர்களை வைத்து அந்த நகையை போலீசார் மீட்டனர். இதையடுத்து ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
Embed widget