மேலும் அறிய

கமிஷனுக்கு ஆசைப்பட்ட போலீஸ்... போர்ஜரி வேலையில் ஈடுபட்டதால் எஸ்.பி எடுத்த அதிரடி..

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுவிலக்கு ஆய்வாளரின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்திய காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் .

செங்கல்பட்டு மாவட்டம் மதுவிலக்கு காவல் ஆய்வாளரின் கையெழுத்தை மோசடியாக, பயன்படுத்திய காவலர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்



மதுராந்தகம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்

செங்கல்பட்டு மாவட்டம்  அச்சரப்பாக்கத்தில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. மதுவிலக்கு ஆய்வாளராக  மங்கள பிரியா  என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடப்பாக்கம் அருகே உள்ள சேம்புலிபுரம் பகுதியில், குருசாமி என்பவரை மது பாட்டில்கள் விற்றதாக,  மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவருடைய வங்கி கணக்கை முடக்கியுள்ளனர்.

வங்கி கணக்கு முடக்கம்

கைது செய்யப்பட்ட குருசாமி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் , அவரது  வங்கிக் கணக்கில் சுமார் 6.30 லட்சம் மது விற்ற பணம் இருந்துள்ளது. மதுவிலக்கு ஆய்வாளரிடம்  குருசாமி தன்னுடைய வங்கி கணக்கை எப்படி விடுவிப்பது என விசாரித்துள்ளார். அப்போது  ஆய்வாளர் முறையாக நீதிமன்றத்தை அணுக வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார்.

ஆனால், சாராய வியாபாரி குருசாமி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி மாறுதலாக, கூவத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற தலைமை காவலர்கள் கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் குறுக்கு வழியில் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்காக ஆலோசனை கேட்டுள்ளார் .

1.5 லட்சம் கமிஷன்

இந்த ஆலோசனையில் அடிப்படையில் சாராய வியாபாரி குருசாமி  காவலர் கோபிநாத்திடம்  என்னுடைய வங்கி கணக்கை மீண்டும் இயக்குவதற்கு நீங்கள் உதவி செய்தால் , அதில் உள்ள பணம் ரூபாய் ஒன்றரை லட்சம் உங்களுக்கு கமிஷன் தருகிறேன் என கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட தலைமை காவலர் கோபிநாத், மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் மணிகண்டன் மூலம் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.‌


திருட்டு வேலையில் ஈடுபட்ட காவலர்கள்


இதற்கு ஒப்புக்கொண்ட மணிகண்டன், மதுவிலக்கு ஆய்வாளர் அலுவலக முத்திரையை ஆய்வாளரின் அனுமதியின்றி பயன்படுத்தியும், போலியாக ஒரு பத்திரம் எழுதி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா கையெழுத்தை போலியாக போட்டு சாராய வியாபாரி குருசாமியிடம் கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட சாராய வியாபாரி குருசாமி கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியின்  மேலாளரிடம் வழங்கியுள்ளார் . இதனை ஆய்வு செய்த வங்கியின் மேலாளர் காவல் ஆய்வாளரிடம் தொடர்பு கொண்ட போது, ஆய்வாளர் நான் எந்த ஒரு கடிதமும் கொடுத்து அனுப்பவில்லை என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் விசாரித்த காவல் ஆய்வாளர் முழு விசாரணை நடத்தியபோது , கோபிநாத் மற்றும் மணிகண்டன் இவர்கள் இருவரும் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சஸ்பெண்ட் செய்து உத்தரவு

காவலர் கோபிநாத் மற்றும் மணிகண்டனை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளரின் அலுவலக முத்திரையை தவறாக, பயன்படுத்த முயன்ற தலைமைக் காவலர்கள் கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். காவல்துறைக்கு என மக்கள் மத்தியில், கௌரவமான பெயர் இருக்கும்போது, ஒரு சில காவலர்கள் செய்யும் செயலால், நாட்டுமட்ட காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்வது போல திருடனுக்கு துணைபோன காவலர்களால், இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget