மேலும் அறிய

Crime : புதைக்கப்பட்ட சிறுமி..! விலங்கு வெப்சீரிஸ் பாணியில் மாயமான தலை..! திணறும் போலீஸ்..

சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மின்கம்பம் விழுந்து இறந்ததால் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச்சென்ற வழக்கில், எந்த விதமான முன்னேற்றமும் இன்றி போலீசார் திணறி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்ரவாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் - நதியா தம்பதி.
 
 
Crime : புதைக்கப்பட்ட சிறுமி..! விலங்கு வெப்சீரிஸ் பாணியில் மாயமான தலை..! திணறும் போலீஸ்..
 
இவர்களுக்கு கிருத்திகா என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்தார். கிருத்திகா கடந்த ஐந்தாம் தேதி அருகில் உள்ள  அவுரிமேடு என்ற கிராமத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகாவின் மீது மின் கம்பம் விழுந்ததில் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
காவல் நிலையத்தில் புகார் 
 
சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் தேதி சிறுமி கிருத்திகா உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சொந்த கிராமத்தில் 15-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவத்தன்று குறிப்பிட்ட மின் கம்பத்தின் மீது ஒரு நபர் ஏறியதாகவும், சிதிலமடைந்திருந்த மின் கம்பம் அதனால்தான் சிறுமியின் மீது விழுந்தது என்றும் சிறுமியின் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
குறிப்பிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில் புகார் பெற்றுக் கொண்ட சித்தாமூர் போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிய முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கு பதியப்பட்ட நபரின் தரப்பினர், வழக்கை வாபஸ் வாங்குமாறு சிறுமியின் உறவினர்கள், குடும்பத்தாரை பகிரங்கமாக மிரட்டுவதாகப் புகார் எழுந்தது.
 

Crime : புதைக்கப்பட்ட சிறுமி..! விலங்கு வெப்சீரிஸ் பாணியில் மாயமான தலை..! திணறும் போலீஸ்..
 
மீண்டும் தோண்டப்பட்டது.
 
இது குறித்தும் சிறுமியின் தரப்பினர் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் இரு தினங்களுக்கு முன்னதாக, சிறுமி புதைக்கப்பட்ட இடம் சேதமடைந்திருப்பதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். இதனையடுத்து மதுராந்தகம் பொறுப்பு டி.எஸ்.பி. துரைபாண்டியன், வட்டாட்சியர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் சிறுமியை அடக்கம் செய்யப்பட்ட இடம் மீண்டும் தோண்டப்பட்டது.
 
சாமியாரின் வேலையாக இருக்கலாம்!
 
அப்போது சிறுமியின் சடலத்திலிருந்து தலை மட்டும் துண்டிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  அந்த இடத்தில் எலுமிச்சை பழம், குங்குமம் போன்றவை கிடந்ததாலும், அன்று அமாவாசை என்பதாலும் வீட்டின் தலைச்சன் பிள்ளையான கிருத்திகா வின் தலையை மாந்த்ரீக நம்பிக்கை உள்ளவர் எவரேனும் வெட்டிச் சென்றனரா? என விசாரணை தொடர்கிறது. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அன்று சூரிய கிரகணமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏதாவது சாமியாரின் வேலையா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Crime : புதைக்கப்பட்ட சிறுமி..! விலங்கு வெப்சீரிஸ் பாணியில் மாயமான தலை..! திணறும் போலீஸ்..
அல்லது, வழக்கை திசை திருப்பவும், கவனத்தைக் கவர்ந்து பூதாகரமாக்கவும் யாராவது இப்படி செய்துள்ளனரா? எனவும் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த வழக்கில் போலீசார் திணறி வருவதால் மதுராந்தகம் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இது தொடர்பாக காவல்துறையினர் தற்பொழுது இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் இருவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்பு, அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Embed widget