மேலும் அறிய

”பாட்டு கேட்குறதுக்கு செல்போன் தரமாட்டியா?” தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொன்ற தந்தை, மகன் கைது..

பாட்டு கேட்க செல்போன் தராததால் தலையில் கல்லை போட்டு கொன்றதாக தொழிலாளி கொலை வழக்கில் கைதான தந்தை மகன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோவையில் பாட்டு கேட்க செல்போன் தராததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக தொழிலாளி கொலை வழக்கில் கைதான தந்தை மகன் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

கோவையில் ராஜன் என்ற 50 வயது நபர் குப்பை பொறுக்கி அதனை விற்று வந்தார். இவர் ராம்நகர் அன்சாரி வீதியில் சாலையோரம் படுத்துத்தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜன் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் காவல் துறையினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 18-ஆம் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

காவல் துறையினர் விசாரணையில் ராஜன் தலையின் மீது கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் இரவு நேரத்தில் தூங்கும் நபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த தொழிலாளியின் நண்பரான சுப்பிரமணி (67) அவரது மகன் அருள்குமார் (47) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி, அருள்குமார் ஆகிய இருவரையும் காட்டூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் பாட்டு கேட்க செல்போன் தராத ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அளித்த வாக்குமூலத்தில், “நாங்களும், ராஜனும் அருகருகே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி வந்தோம். ராஜன் வைத்திருந்த செல்போனை வைத்து நாங்கள் பாட்டு கேட்டு வந்தோம். சம்பவத்தன்று மது குடித்து விட்டு செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தோம். அப்போது ராஜன் செல்போனில் சார்ஜ் இல்லை. இதனால் அவர் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று சார்ஜ் போட்டு வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வந்ததும் நாங்கள் பாட்டுக் கேட்க செல்போன் கேட்டோம். அதற்கு அவர் தரவில்லை.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னிடம் செல்போன் இல்லை கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு விட்டு தப்பிச்சென்றோம். இதில்  காயமடைந்த அவர் உயிரிழந்து உள்ளார்” என அவர்கள் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் க்ரைம் செய்திகளுக்கு..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Embed widget