மேலும் அறிய

”பாட்டு கேட்குறதுக்கு செல்போன் தரமாட்டியா?” தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொன்ற தந்தை, மகன் கைது..

பாட்டு கேட்க செல்போன் தராததால் தலையில் கல்லை போட்டு கொன்றதாக தொழிலாளி கொலை வழக்கில் கைதான தந்தை மகன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோவையில் பாட்டு கேட்க செல்போன் தராததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக தொழிலாளி கொலை வழக்கில் கைதான தந்தை மகன் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

கோவையில் ராஜன் என்ற 50 வயது நபர் குப்பை பொறுக்கி அதனை விற்று வந்தார். இவர் ராம்நகர் அன்சாரி வீதியில் சாலையோரம் படுத்துத்தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜன் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் காவல் துறையினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 18-ஆம் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

காவல் துறையினர் விசாரணையில் ராஜன் தலையின் மீது கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் இரவு நேரத்தில் தூங்கும் நபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த தொழிலாளியின் நண்பரான சுப்பிரமணி (67) அவரது மகன் அருள்குமார் (47) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி, அருள்குமார் ஆகிய இருவரையும் காட்டூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் பாட்டு கேட்க செல்போன் தராத ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அளித்த வாக்குமூலத்தில், “நாங்களும், ராஜனும் அருகருகே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி வந்தோம். ராஜன் வைத்திருந்த செல்போனை வைத்து நாங்கள் பாட்டு கேட்டு வந்தோம். சம்பவத்தன்று மது குடித்து விட்டு செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தோம். அப்போது ராஜன் செல்போனில் சார்ஜ் இல்லை. இதனால் அவர் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று சார்ஜ் போட்டு வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வந்ததும் நாங்கள் பாட்டுக் கேட்க செல்போன் கேட்டோம். அதற்கு அவர் தரவில்லை.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னிடம் செல்போன் இல்லை கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு விட்டு தப்பிச்சென்றோம். இதில்  காயமடைந்த அவர் உயிரிழந்து உள்ளார்” என அவர்கள் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் க்ரைம் செய்திகளுக்கு..

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
ISROs  PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
ISROs PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
ISROs  PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
ISROs PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
Virat Kohli: நாங்க தர்றோம் ஃபேர்வெல்.. கோலியை கவுரவித்த ரசிகர்கள்.. பிசிசிஐ-க்கு பளார்.. பளார்!
Virat Kohli: நாங்க தர்றோம் ஃபேர்வெல்.. கோலியை கவுரவித்த ரசிகர்கள்.. பிசிசிஐ-க்கு பளார்.. பளார்!
PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Embed widget