மேலும் அறிய

IPL Match fixing : பாகிஸ்தான் உதவியோடு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம்.. மூவரைக் கைது செய்த சிபிஐ!

பாகிஸ்தான் உதவியோடு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக மூவரைக் கைது செய்துள்ளது சிபிஐ. இது தொடர்பாக நாடு முழுவதும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உதவியோடு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு சிபிஐ மூவரைக் கைது செய்துள்ளது. இதில் இருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் மேட்ச் பிக்சிங் குறித்து செய்யப்பட்டிருக்கும் வழக்குப் பதிவின் முதல் தகவல் அறிக்கையில், `பாகிஸ்தான் நாட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மாற்றம் செய்யும் குழு ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிபிஐ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது’ எனக் கூறப்பட்டுள்ளது. 

டெல்லியின் ரோகிணி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் வாசு, குர்ரம் சதீஷ் ஆகியோரைக் குற்றவாளிகளாகவும் சிபிஐ இந்த முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்தக் குழு செயல்பட்டு வருவதாகவும், மக்களைச் சூதாட்டத்தில் ஈடுபட வைத்து மோசடி செய்து வந்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

IPL Match fixing : பாகிஸ்தான் உதவியோடு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம்.. மூவரைக் கைது செய்த சிபிஐ!

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளைப் போலி அடையாளங்களுடன் வைத்திருப்பதாகவும், பெயர் தெரியாத பல வங்கி அதிகாரிகளின் உதவியோடு இவற்றை நடத்தி வருவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், இந்த முதல் தகவல் அறிக்கையில், `இந்த வங்கிக் கணக்குகள் வெவ்வேறு பிறந்த தேதிகள் முதலான போலியான தகவல்களைச் சமர்பித்து திறக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் பொது மக்களிடம் சூதாட்டம் மூலமாக பெறப்படும் பணத்தில் ஒரு பகுதியை சட்டவிரோதமாக அந்நியச் செலாவணி மேற்கொள்ளவும் வெளிநாடுகளில் வாழும் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர்’ எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், சிபிஐ அதிகாரிகள் தரப்பில் இந்த வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணப் பரிவர்த்தைகள் பெரும்பாலும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவை கிரிக்கெட் சூதாட்டம் முதலான பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

IPL Match fixing : பாகிஸ்தான் உதவியோடு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம்.. மூவரைக் கைது செய்த சிபிஐ!

டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களைப் போலவே, ராஜஸ்தான் மாநிலத்திலும் சிபிஐ இதே கிரிக்கெட் சூதாட்டம் விவகாரத்தில் நால்வரைக் கைது செய்துள்ளது. இந்தக் கும்பலும் பொது மக்களிடம் சூதாட்டம் மூலம் பெறப்படும் பணத்தை அந்நியச் செலாவணிக்காக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானில் சிபிஐ தரப்பில் சிங், மீனா, ராம் அவதார், ஷர்மா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவர் மூலமாக இந்தியாவில் பலரையும் +9233222226666 என்ற பாகிஸ்தான் எண்ணைப் பயன்படுத்தி அவர்களுடன் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget