மேலும் அறிய

IPL Match fixing : பாகிஸ்தான் உதவியோடு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம்.. மூவரைக் கைது செய்த சிபிஐ!

பாகிஸ்தான் உதவியோடு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக மூவரைக் கைது செய்துள்ளது சிபிஐ. இது தொடர்பாக நாடு முழுவதும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உதவியோடு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு சிபிஐ மூவரைக் கைது செய்துள்ளது. இதில் இருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் மேட்ச் பிக்சிங் குறித்து செய்யப்பட்டிருக்கும் வழக்குப் பதிவின் முதல் தகவல் அறிக்கையில், `பாகிஸ்தான் நாட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மாற்றம் செய்யும் குழு ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிபிஐ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது’ எனக் கூறப்பட்டுள்ளது. 

டெல்லியின் ரோகிணி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் வாசு, குர்ரம் சதீஷ் ஆகியோரைக் குற்றவாளிகளாகவும் சிபிஐ இந்த முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்தக் குழு செயல்பட்டு வருவதாகவும், மக்களைச் சூதாட்டத்தில் ஈடுபட வைத்து மோசடி செய்து வந்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

IPL Match fixing : பாகிஸ்தான் உதவியோடு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம்.. மூவரைக் கைது செய்த சிபிஐ!

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளைப் போலி அடையாளங்களுடன் வைத்திருப்பதாகவும், பெயர் தெரியாத பல வங்கி அதிகாரிகளின் உதவியோடு இவற்றை நடத்தி வருவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், இந்த முதல் தகவல் அறிக்கையில், `இந்த வங்கிக் கணக்குகள் வெவ்வேறு பிறந்த தேதிகள் முதலான போலியான தகவல்களைச் சமர்பித்து திறக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் பொது மக்களிடம் சூதாட்டம் மூலமாக பெறப்படும் பணத்தில் ஒரு பகுதியை சட்டவிரோதமாக அந்நியச் செலாவணி மேற்கொள்ளவும் வெளிநாடுகளில் வாழும் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர்’ எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், சிபிஐ அதிகாரிகள் தரப்பில் இந்த வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணப் பரிவர்த்தைகள் பெரும்பாலும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவை கிரிக்கெட் சூதாட்டம் முதலான பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

IPL Match fixing : பாகிஸ்தான் உதவியோடு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம்.. மூவரைக் கைது செய்த சிபிஐ!

டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களைப் போலவே, ராஜஸ்தான் மாநிலத்திலும் சிபிஐ இதே கிரிக்கெட் சூதாட்டம் விவகாரத்தில் நால்வரைக் கைது செய்துள்ளது. இந்தக் கும்பலும் பொது மக்களிடம் சூதாட்டம் மூலம் பெறப்படும் பணத்தை அந்நியச் செலாவணிக்காக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானில் சிபிஐ தரப்பில் சிங், மீனா, ராம் அவதார், ஷர்மா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவர் மூலமாக இந்தியாவில் பலரையும் +9233222226666 என்ற பாகிஸ்தான் எண்ணைப் பயன்படுத்தி அவர்களுடன் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
Embed widget