மேலும் அறிய

திருவண்ணாமலை: வினாத்தாள் வெளியான விவகாரம்: தனியார் பள்ளி தாளாளர் உட்பட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு

திருவண்ணாமலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 2 தனியார் பள்ளிக்கு சம்மன் அளிக்கப்பட்டு தனியார் பள்ளி தாளாளர் உட்பட்ட 4 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. கொரோனா தொற்றால் தேர்வு குறித்த பயிற்சி இல்லாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கு, அச்சத்தை போக்கும் வகையில் பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே திருப்புதல் தேர்வை அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை.

பிப்9-ம் தேதிமுதல் இந்த தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்தினமே கேள்வித்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளிக் கல்வித்துறை, வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசி மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்களே கசிந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களில், பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் பொன்குமார் நேரடி விசாரணை மேற்கொண்டு இதை உறுதிசெய்தார். பின்னர், பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் அதற்கான அறிக்கையை அவர் அளித்தார்.

 


திருவண்ணாமலை: வினாத்தாள் வெளியான விவகாரம்: தனியார் பள்ளி தாளாளர் உட்பட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு

 

 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இந்த இரண்டு பள்ளிகளில் இருந்தும் கேள்வித்தாள்கள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளியைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எந்த வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நடைபெறும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த பணியிடத்தில், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்கி நியமித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் அரசு நகராட்சி, நிதியுதவி மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி 10, மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் (பிப் 14) தேதி அன்று மதியம் 2 மணியளவில் பிரிக்கப்பட வேண்டிய 12ம் வகுப்பு கணித பாடம் வினாத்தாள் முன்னதாக வெளியானது. 

 

 

 


திருவண்ணாமலை: வினாத்தாள் வெளியான விவகாரம்: தனியார் பள்ளி தாளாளர் உட்பட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு

 

இதற்கு முன்னதாக (பிப் 11) அன்று மாலை 6 மணி அளவில் அஸ்வின் என்பவர் கணிதப்பாட வினாத்தாளை பிரித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் (பிப் 14) அன்று நடைபெற இருந்த 10ம் வகுப்பு அறிவியல் கணித வினாத்தாளிலும் மற்றும் 12ம் வகுப்பு கணித வினாத்தாள்களும் சில பள்ளிகள் மூலம் தேர்வுகள் வினாத்தாள்கள் வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட நபர்கள் யார் என்று கண்டுபிடித்து தரவேண்டும் என காவல்துறையிடம் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது போளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் ஆக்ஸினியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ( Auxilium metric hr school ) நிர்மல் ரோஸ் ( தாளாளர் ), கிரேசி பாத்திமா (பிரின்ஸ்பல்) மற்றும் பிரசாத் (கணிதஆசிரியர் ), ஜெனிபர் அலுவலக உதவியாளர் ஆகிய 4 நபர்கள் மூலமாக ‌வினாதாள் வெளியானது தெரியவந்தது. மேலும் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் 4 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, மேலும் இந்த செயலில் மற்றவர்களும் ஈடுபட்டுள்ளாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Embed widget