மேலும் அறிய

புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

புதுச்சேரி பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்கு பதிவு - ஐந்து பேர் கைது

புதுவை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல ரவுடி லாஸ்பேட்டை அருகே கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற பொடிமாஸ் (வயது 27).  இவர் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீசில் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சரத்குமார் ஓராண்டுக்கு பின் வெளியே வந்துள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி (23) என்ற மனைவியும், 9 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.


புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சரத்குமார் ஊருக்குள் நுழைய லாஸ்பேட்டை போலீசார் தடை விதித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெளியூர்களில் அவர் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரத்குமார், அரியாங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.  ஆனால் கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் லாஸ்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வெங்கடேசன் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், அவருடன் சரத்குமாரும் தங்கி இருந்தார். அரியாங்குப்பம் (தெற்கு) போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் வெங்கடேசன் வீடு உள்ளது.


புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து கதவை தட்டியது. தூக்க கலக்கத்தில் இருந்த வெங்கடேசன் கதவை திறந்தார். உடனே அவரை அந்த கும்பல் வெளியே இழுத்து கை, கால்களை கட்டி அங்குள்ள கழிவறையில் போட்டு அடைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு ஒரு அறையில் படுத்து தூங்கிய சரத்குமாரை அந்த கும்பல் சுற்றிநின்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

Police Have Arrested Six People, Including The Owner Of An Iron Workshop Who Had Prepared Terror Weapons For A Nallavadu Fisherman | புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: மீனவர்களுக்கு வீச்சு அரிவாள் ...

இதில் கழுத்து, தலை, முகம், கைகள், இடுப்பு என உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்து போய் இருந்தது. இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரத்குமார் துடிதுடித்து இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்த புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சரத்குமாரின் உடலை பார்வையிட்டனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர கொலை குறித்து வெங்கடேசன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சரத்குமாரை கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget