மேலும் அறிய

புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

புதுச்சேரி பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்கு பதிவு - ஐந்து பேர் கைது

புதுவை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல ரவுடி லாஸ்பேட்டை அருகே கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற பொடிமாஸ் (வயது 27).  இவர் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீசில் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சரத்குமார் ஓராண்டுக்கு பின் வெளியே வந்துள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி (23) என்ற மனைவியும், 9 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.


புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சரத்குமார் ஊருக்குள் நுழைய லாஸ்பேட்டை போலீசார் தடை விதித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெளியூர்களில் அவர் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரத்குமார், அரியாங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.  ஆனால் கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் லாஸ்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வெங்கடேசன் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், அவருடன் சரத்குமாரும் தங்கி இருந்தார். அரியாங்குப்பம் (தெற்கு) போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் வெங்கடேசன் வீடு உள்ளது.


புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து கதவை தட்டியது. தூக்க கலக்கத்தில் இருந்த வெங்கடேசன் கதவை திறந்தார். உடனே அவரை அந்த கும்பல் வெளியே இழுத்து கை, கால்களை கட்டி அங்குள்ள கழிவறையில் போட்டு அடைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு ஒரு அறையில் படுத்து தூங்கிய சரத்குமாரை அந்த கும்பல் சுற்றிநின்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

Police Have Arrested Six People, Including The Owner Of An Iron Workshop Who Had Prepared Terror Weapons For A Nallavadu Fisherman | புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: மீனவர்களுக்கு வீச்சு அரிவாள் ...

இதில் கழுத்து, தலை, முகம், கைகள், இடுப்பு என உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்து போய் இருந்தது. இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரத்குமார் துடிதுடித்து இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்த புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சரத்குமாரின் உடலை பார்வையிட்டனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர கொலை குறித்து வெங்கடேசன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சரத்குமாரை கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Embed widget