மேலும் அறிய

தற்கொலை செய்துகொண்ட சிறுவன்? இறந்தும் உதவி செய்யும் சிறுவனின் கண்கள்! செங்கல்பட்டில் நெகிழ்ச்சி

Sucide : " மறைமலைநகர் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டது "

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டது
 
டியூஷனுக்கு போக சொல்லி
 
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கூடலூர் தொகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 37 மனைவி சித்ரா இவர்களது மகன்  எழில்குமரன் (14). இவர் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் டியூஷனுக்கு செல்வது வழக்கம். அதேபோல எப்போதும் போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த எழில்குமரனுக்கு தாய் சாப்பாடு போட்டு வைத்துவிட்டு சாப்பிட்டதும் டியூஷனுக்கு போக சொல்லி ,துணி துவைக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 
அதிர்ச்சி அடைந்து
 
தொடர்ந்து துணியை காய வைத்து விட்டு படுக்கையறைக்குச் சென்ற சித்திரா எழில்குமரன் மின்விசிறியில், துப்பட்டாவை கொண்டு தூக்கில் சடலமாக தொடங்கியதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிய எழில் குமரனை மீட்டனர். பின்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்
 
"என் மகனை, தான் நான் இழந்து விட்டேன் "
 
பின்பு ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது பள்ளி மாணவனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன மன அழுத்தம் என தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமொழி நகர் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
 
சிறுவனின் கண்கள் தானம்
 
இந்த நிலையில ”என் மகனை தான் நான் இழந்து விட்டேன். ஆனால் அவனது கண்கள் வாழும்” என பெற்றோர் தெரிவித்தனர். கண்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அந்த சிறுவன் தானமாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கூடலூர் பகுதியில்  மரணத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது
.

Suicidal Trigger Warning.
 
 
 
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
 
 
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget