மேலும் அறிய

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

மது போதையில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வீசியதாக முதற்கட்ட தகவல்

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா காணப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது,. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் குறைந்த அளவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அங்குள்ள கடைகளுக்கு அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தி வந்தனர். குறைந்த அளவு செயல்படும் கடைகளால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டமும் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.


பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

இந்த சூழலில் தான்  நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். அதிக சத்தத்துடன் வெடிகுண்டானது வெடித்து உள்ளது,  குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில் நாட்டு வெடிகுண்டானது வீசப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை என்பதாலும்  வெடிகுண்டு வெடித்ததில்  அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் பேருந்து நிலையத்திலும் பெரிய எந்த வித சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றவர்கள் யார்? எதற்காக இந்த பகுதியில் வீசினர்? இதனை எங்கு தயார் செய்தனர் என்றும், வேறு ஏதேனும் அசம்பாவித  சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு  காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்,


பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

இந்த சூழலில் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் மற்றும் சுடலை என்ற இரு இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர், நேற்று முன் தினம் பாளையங்கோட்டையில் நடந்த கோவில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை எடுத்து சென்று இருவரும் மது போதையில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து விளையாட்டாக வீசி பார்த்துள்ளனர் என காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது, இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget