மேலும் அறிய

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

மது போதையில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வீசியதாக முதற்கட்ட தகவல்

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா காணப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது,. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் குறைந்த அளவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அங்குள்ள கடைகளுக்கு அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தி வந்தனர். குறைந்த அளவு செயல்படும் கடைகளால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டமும் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.


பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

இந்த சூழலில் தான்  நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். அதிக சத்தத்துடன் வெடிகுண்டானது வெடித்து உள்ளது,  குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில் நாட்டு வெடிகுண்டானது வீசப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை என்பதாலும்  வெடிகுண்டு வெடித்ததில்  அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் பேருந்து நிலையத்திலும் பெரிய எந்த வித சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றவர்கள் யார்? எதற்காக இந்த பகுதியில் வீசினர்? இதனை எங்கு தயார் செய்தனர் என்றும், வேறு ஏதேனும் அசம்பாவித  சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு  காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்,


பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 இளைஞர்கள் கைது

இந்த சூழலில் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் மற்றும் சுடலை என்ற இரு இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர், நேற்று முன் தினம் பாளையங்கோட்டையில் நடந்த கோவில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை எடுத்து சென்று இருவரும் மது போதையில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து விளையாட்டாக வீசி பார்த்துள்ளனர் என காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது, இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
Happy Rose Day 2026 Wishes: என் ரோஜா நீயா! காதலை மலர்களால் வெளிப்படுத்தும் நாள்! ரோஸ் டே வாழ்த்துகள்
Happy Rose Day 2026 Wishes: என் ரோஜா நீயா! காதலை மலர்களால் வெளிப்படுத்தும் நாள்! ரோஸ் டே வாழ்த்துகள்
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
Embed widget