மேலும் அறிய

Crime : இரவு நேரத்தில் குரைத்ததால் ஆத்திரம்.. வளர்ப்பு நாய்க்கு இழைக்கப்பட்ட கொடூரம்.. மூவர் கைது..

பெங்களூரை அடுத்த கே.ஆர்.நகரில் வீட்டு நாய் ஒன்றை மரக்கட்டையால் மூன்று பேர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரை அடுத்த கே.ஆர்.நகரில் வீட்டு நாய் ஒன்றை மரக்கட்டையால் மூன்று பேர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூர் கிழக்கு நகர் கே.ஆர்.நகரில் வசித்து வருபவர் கதிகப்பா. இவர் தனது வீட்டில் அச்சு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை கதிகப்பா தனது அச்சுவை வீட்டிற்கு வெளியே விளையாட விட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள நாகராஜ் என்பவருக்கு சொந்தமான நாயுடன் அச்சு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. 

சத்தம்கேட்டு கதிகப்பா வெளியே வந்து பார்த்து நாய் அச்சுவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். காலை முதல் சண்டையிட்ட பயத்தில் இருந்த அச்சு என்ற நாய் கத்தியுள்ளது. 

இரவு பக்கத்து வீட்டுக்காரர்களான ரஞ்சித், ராகுல் மற்றும் ரஜத் ஆகியோர் கதிகப்பா வீடு வழியாக சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்து அச்சு வெகுநேரமாக குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்க தொடங்கியுள்ளனர். அதில் வலி பொறுக்க முடியாமல் நாய் தரையில் சுருண்ட படி கத்தி உள்ளது. அவர்களை தடுக்க முயன்றுள்ளார். தொடர்ந்து  அந்த நபர் இவர்கள் செய்யும் கொடூரத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இருந்தாலும் அந்த நபரை மூன்று பேரும் தள்ளி விட்டனர். பின்னர் தொடர்ந்து அவர்கள் நாயை கடுமையாக தாக்கினர். இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த நாயின் உரிமையாளர் தட்டி கேட்டுள்ளார். தொடர்ச்சியாக நாயை மீட்க முயன்றபோது, ​​கதிகப்பாவையும் தாக்கியுள்ளனர். 

கதிகப்பாவை சிகிச்சைக்காக கே.ஆர்.புரம் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவரது நாய் டோம்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய கதிகப்பா கே.ஆர். புரம் காவல் நிலையத்தில் தனக்கும் தனது நாயுக்கும் நடந்த கொடூரத்தை வீடியோவை ஆதரமாக கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த கே.ஆர்.புரம் காவல்துறையினர், ரஞ்சித், ராகுல், ரஜத் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தானாக முன்வந்து விலங்குகளை காயப்படுத்துதல், கொலை செய்தல் அல்லது காயப்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11ன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget