மேலும் அறிய

NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர்.

டெல்லியில் என்.ஆர்.ஐ வங்கிக்கணக்கிலிருந்து பணத்தைத் திருட முயற்சி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய அல்லாது வேறொரு நாட்டில் குடிபெயர்ந்தக் குடிமக்கள் non resident Indian அதாவது என்.ஆர்.ஐ என்று அழைக்கப்படுவார்கள். இவர்களில் பலர் தொழில் ரீதியாக இந்தியாவில் வங்கிக்கணக்குச் சேவைகளையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இந்திய வங்கித்துறையில் என்.ஆர்.ஐ சேமிப்புக் கணக்குகள் மற்றும் அதனை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. மேலும் பல பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இவர்களது வங்கிக்கணக்கிலிருந்து வங்கி ஊழியர் உள்பட பலர் பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

NRI கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி:

சமீபத்தில் NRI வங்கிக்கணக்கில் இருந்து மட்டும் அதிகப்படியான பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் பல்வேறு புகார்களையடுத்து இப்பிரச்சனைக்குறித்து வங்கி நிர்வாகம் கவனித்து வந்தது. பின்னர் தொழில்நுட்ப வாயிலான திருட்டு என்பதால் இதனை சைபர் கிரைம் போலீசாரிடம் வங்கி நிர்வாகிகள் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில்  என்ஆர்ஐ வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் இருப்பதையடுத்து இதனை எப்படியாவது திருட வேண்டும் என நினைத்து ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர். இதனைப்பயன்டுத்தி பல முறை பணம் எடுக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியதில், என்ஆர்ஐ தொழிலதிபர் ஒருவரின் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் வரையில் பணத்தை திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது. மேலும் 32 வயதான ஹெச்டிஎஃப்சி வங்கி மேலாளர் மற்றும் வங்கியின் தொழில்நுட்ப குழுவின் ஆதரவோடு திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது.

  • NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

இதனையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான என்.ஆர்.ஐ வங்கிப்பணத்தைத் திருட முயற்சி செய்தக் குற்றத்திற்காக டெல்லி,ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் 50 சதவீதத்தை வங்கி நிர்வாகிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். இதோடு அமெரிக்க மொபைல் எண்ணையும் இந்திய எண்ணிற்கு மாற்ற முயற்சிகள் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Embed widget