மேலும் அறிய

NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர்.

டெல்லியில் என்.ஆர்.ஐ வங்கிக்கணக்கிலிருந்து பணத்தைத் திருட முயற்சி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய அல்லாது வேறொரு நாட்டில் குடிபெயர்ந்தக் குடிமக்கள் non resident Indian அதாவது என்.ஆர்.ஐ என்று அழைக்கப்படுவார்கள். இவர்களில் பலர் தொழில் ரீதியாக இந்தியாவில் வங்கிக்கணக்குச் சேவைகளையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இந்திய வங்கித்துறையில் என்.ஆர்.ஐ சேமிப்புக் கணக்குகள் மற்றும் அதனை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. மேலும் பல பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இவர்களது வங்கிக்கணக்கிலிருந்து வங்கி ஊழியர் உள்பட பலர் பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

NRI கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி:

சமீபத்தில் NRI வங்கிக்கணக்கில் இருந்து மட்டும் அதிகப்படியான பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் பல்வேறு புகார்களையடுத்து இப்பிரச்சனைக்குறித்து வங்கி நிர்வாகம் கவனித்து வந்தது. பின்னர் தொழில்நுட்ப வாயிலான திருட்டு என்பதால் இதனை சைபர் கிரைம் போலீசாரிடம் வங்கி நிர்வாகிகள் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில்  என்ஆர்ஐ வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் இருப்பதையடுத்து இதனை எப்படியாவது திருட வேண்டும் என நினைத்து ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர். இதனைப்பயன்டுத்தி பல முறை பணம் எடுக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியதில், என்ஆர்ஐ தொழிலதிபர் ஒருவரின் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் வரையில் பணத்தை திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது. மேலும் 32 வயதான ஹெச்டிஎஃப்சி வங்கி மேலாளர் மற்றும் வங்கியின் தொழில்நுட்ப குழுவின் ஆதரவோடு திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது.

  • NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

இதனையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான என்.ஆர்.ஐ வங்கிப்பணத்தைத் திருட முயற்சி செய்தக் குற்றத்திற்காக டெல்லி,ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் 50 சதவீதத்தை வங்கி நிர்வாகிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். இதோடு அமெரிக்க மொபைல் எண்ணையும் இந்திய எண்ணிற்கு மாற்ற முயற்சிகள் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
Embed widget