மேலும் அறிய

ஆரணி: தேர்வு முடிந்த உற்சாகத்தில் சிக்கன் 65 சாப்பிட்ட பள்ளி மாணவர்: திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஆரணியில் தனியார் ஹோட்டலில் சிக்கன் 65 சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி நகராட்சியில் அசைவ உணவகங்கள் மற்றும் கடைகள் ஏராளமாக இயங்கி வருகிறது. அங்கு இயங்கி வரும் அசைவ உணவகங்களில் சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் பக்கோடா உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆரணியில் உள்ள பாளையத்தை சேர்ந்த பனிரண்டாம் வகுப்பு மாணவன் திருமுருகன். இவர் பொதுத்தேர்வு முடிந்து தன் நண்பர்களோடு ஆரணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் தேர்வு முடிந்த உற்சாகத்தில் சிக்கன் 65 சாப்பிட்டுள்ளார்.

 

 


ஆரணி: தேர்வு முடிந்த உற்சாகத்தில் சிக்கன் 65 சாப்பிட்ட பள்ளி மாணவர்: திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

சிக்கன் 65 சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவன் திருமுருகனுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாணவனை சிகிச்சைக்காக ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். திருமுருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனால், உடனடியாக திருமுருகனை வேலூர்  மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவன் திருமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி நகர காவல் துறையினர் மாணவனின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாணவனின் உயிரிழப்புக்கு கடையில் விற்கப்பட்ட தரமற்ற சிக்கன் 65-யே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அந்த கடையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிக்கன் 65 சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக ஆரணியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அங்கு அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து, அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் சமையல்காரர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கடைக்கும் சீல் வைத்தனர்.

இதுகுறித்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது நீதிமன்றத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கூறி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே அந்த பகுதியில் தரமற்ற உணவால் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில் தற்போது இன்னொரு 12ம் வகுப்பு மாணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆரணி: தேர்வு முடிந்த உற்சாகத்தில் சிக்கன் 65 சாப்பிட்ட பள்ளி மாணவர்: திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

ஆரணி பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் சிக்கன் கடைகளும், ஷவர்மா அசைவ உணவகங்களும் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமற்ற கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சிகளையும், தரமற்ற எண்ணெய்களையும் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.  இதுமட்டுமின்றி, கெட்டுப்போன அசைவ உணவை மீண்டும் சூடாக்கி விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் முறையாக ஆய்வு நடத்தாமல் லஞ்சம் பெற்றுச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget