மேலும் அறிய

Crime: திருமணமாகாமல் பிரசவித்த பெண்.. குடும்பத்தோடு குழந்தையை கொன்ற கொடூரம்..

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அருகே கடவந்தரா என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பனம்பள்ளி வித்யா நகரில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கேரளாவில் பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தையை கொடூரமாக கொன்ற குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அருகே கடவந்தரா என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பனம்பள்ளி வித்யா நகரில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையில் கேட்பாரற்று ஒரு பிளாஸ்டிக் கவர் கிடந்துள்ளது. பார்ப்பதற்கு யாரோ தவற விட்ட பொருளுடன் கிடப்பதாக நினைத்து அந்த தொழிலாளர்கள் கவரை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதனுள் தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக எர்ணாகுளம் தெற்கு காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான எர்ணாகுளம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தான் அந்த பிளாஸ்டிக் கவர் வீசப்பட்டதை உறுதி செய்தனர். உடனே அங்கிருந்த அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு வீட்டின் கழிவறையில் மட்டும் ரத்தக்கறை இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வீட்டில் இருப்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அந்த வீட்டில் திருமணமாகாத 20 வயது இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்த பெற்றோர், குழந்தை பிறக்கும் வரை காத்திருந்துள்ளனர். நேற்று வீட்டில் வைத்து அப்பெண் குழந்தையை பெற்றுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த குழந்தையை கூரியர் கவரில் சுற்றி அப்பெண்ணின் தாய் மற்றும் தந்தை 5வது மாடியில் இருந்து வீசி கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தாய், தந்தை, இளம்பெண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

கூரியர் கவரில் இருந்த பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்  முகவரி காட்டியதும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களை எளிதாக காவல்துறை கண்டறிய உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ள ஐஐடியில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ள ஐஐடியில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Embed widget