மேலும் அறிய

Video | திசையன்விளை : நள்ளிரவில் புகுந்து 50 சவரன் நகை கொள்ளை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

திசையன்விளையில் நள்ளிரவில் நடந்த திருட்டில், 50 சவரன் நகை கொள்ளை போயுள்ளது

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சைமன், இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள  கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டின் கீழே உள்ள அறைகளில் குடும்பத்துடன் உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட நபர் நள்ளிரவு முதல் மாடிக்கு சுவற்றின் மீது ஏறி அந்த வழியாக உள்ளே  புகுந்துள்ளார். பின்னர்  மாடியில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த  50 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அதே பகுதிகளில் அடுத்த அடுத்த 4 வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர் ஒரு கும்பல். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். அருகில் வேறு ஏதேனும் வீடுகளில் திருடு போயுள்ளதா என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,


Video | திசையன்விளை : நள்ளிரவில் புகுந்து 50 சவரன் நகை கொள்ளை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
இது குறித்து அப்பகுதி மக்கள் உவரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.. அதில் நள்ளிரவில்  வாலிபர் ஒருவர் தலையில் துணியை கட்டிக் கொண்டு, சட்டை இல்லாமல் லுங்கி அணிந்தபடி மடியில் ஆயுதத்தை துணியால் சுத்தி வைத்துக்கொண்டு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில்  ஏறி குதித்து வீட்டிற்குள் செல்லும்  காட்சி பதிவாகி உள்ளது. பின்னர் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார்,


Video | திசையன்விளை : நள்ளிரவில் புகுந்து 50 சவரன் நகை கொள்ளை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சிசிடிவில் பதிவான வீடியோ காட்சி 👇

இந்த பதிவுகளின் அடிப்படையில் இந்த வாலிபர் யார்? இந்த கொள்ளை சம்பவத்தில் தனியாக ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், இதற்கு முன் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களின் தகவல்களை திரட்டி சிசிடிவி பதிவில் உள்ள நபருடன் ஒத்துப்போகிறதா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெறா வண்ணம் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்,  திசையன்விளையில் ஒய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதை தொடர்ந்து அடுத்த அடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Video | திசையன்விளை : நள்ளிரவில் புகுந்து 50 சவரன் நகை கொள்ளை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Embed widget