மேலும் அறிய

தொழிலில் நஷ்டம்; அபராதம் விதித்த அதிகாரிகள்.. - ஹோட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை

ஹோட்டல் தொழிலில் வியாபாரம் சுமாராக இருந்ததால் மணிக்குட்டன் நிறைய பேரிடம் கடன் பெற்று குடும்பத்தை கவனித்து வந்ததாகவும், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் ஹோட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் மணிக்குட்டன் என்பவர் தனது மனைவி சந்தியா மற்றும் மகன் அஜீஷ், மகள் அமேயா ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களுடன் சந்தியாவின் அத்தை தேவகி என்பவரும் வசித்து வந்தார். அத்திங்கல் பகுதியில் மணிக்குட்டன் சிறிய அளவில் ஹோட்டல் நடத்தி வந்தார். 

இதனிடையே ஹோட்டல் தொழிலில் வியாபாரம் சுமாராக இருந்ததால் அவர் நிறைய பேரிடம் கடன் பெற்று குடும்பத்தை கவனித்து வந்ததாகவும், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஹோட்டலுக்கு வந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் உணவு சுகாதாரமாக இல்லை எனக் கூறி ஹோட்டலை மூடி சீல் வைத்ததோடு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தனர். 

ஏற்கனவே கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் ஹோட்டலையும் மூடச் சொன்ன சம்பவம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இனி என்ன செய்ய போகிறோம் என தெரியாமல் திகைத்து நின்ற அவர் விரக்தியில் தற்கொலை முடிவை கையில் எடுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் நேற்று காலையில் ஹோட்டலை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் ஊழியர் ஒருவர் இவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். 

அப்போது மணிக்குட்டன் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மனைவி சந்தியா, மகள் அமேயா, மகன் அஜீன், அத்தை தேவகி ஆகியோர் விஷம் குடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இந்த தற்கொலை பற்றி தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடன் பிரச்சினை,ஹோட்டலுக்கு சீல் ஆகிய காரணங்களால் மணிக்குட்டன் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
Manali Oil Godown Blast: 60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
Upcoming E Scooters: இன்னும் 6 மாசம்தான்! இந்தியாவில் வரப்போகும் அசத்தலான E Scooters லிஸ்ட்! என்னென்ன?
Upcoming E Scooters: இன்னும் 6 மாசம்தான்! இந்தியாவில் வரப்போகும் அசத்தலான E Scooters லிஸ்ட்! என்னென்ன?
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Embed widget