மேலும் அறிய

’சிங்கம்’ பாணியில் சேஸிங்..நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட 3000 கிலோ ஹெராயின்!- நடந்தது என்ன?  

3000 கிலோ ஹெராயின் அதானிக்குச் சொந்தமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்திய வரலாற்றிலேயே இதுவரை இவ்வளவு ஹெராயினைக் கைப்பற்றியதில்லை என வாயடைத்துள்ளனர்,

கப்பல் நிறைய போதைப்பொருள் கடத்துவது துப்பாக்கி சேஸிங்களுக்கு நடுவே போலீஸ் நடுக்கடலில் அதனை சீஸ் செய்வது  எல்லாம் சினிமாவில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால் நம்பவே முடியாத வகையாக குஜராத்தின் அதானி துறைமுகத்தில் அண்மையில் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதானிக்குச் சொந்தமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அண்மையில் வருவாய் புலனாய்வுத்துறை கைப்பற்றியுள்ளது. அதுவும் இரண்டு மிகப்பெரிய டேங்கர்கள் நிறையக் கைப்பற்றப்பட்டிருக்கும் இந்த போதைப்பொருளின் ஒட்டுமொத்த மதிப்பு 21,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இதுவரையிலான இந்திய வருவாய் புலனாய்வுத்துறை வரலாற்றிலேயே இது மிகப்பெரிய அளவிலான சேஸிங் எனக் கூறப்படுகிறது. கடந்த 15 செப்டம்பர் அன்று ஈரானிலிருந்து குஜராத் வந்த கப்பலை மறித்து அதில் ஆய்வு செய்தது வருவாய் புலனாய்வுத்துறை. அதில்  ஒரு கண்டெய்னரில் 1999.57 கிலோ ஹெராயினும் மற்றொன்றில் 988.64 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டது. ஒரு கிலோ ஹெராயினின் சந்தை மதிப்பு ஏழு கோடி ரூபாய் என்னும் நிலையில் இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 21,000 கோடி என மதிப்பிட்டுள்ளனர் வருவாய்த்துறையினர். இந்த ஹெராயின்கள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


’சிங்கம்’ பாணியில் சேஸிங்..நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட 3000 கிலோ ஹெராயின்!- நடந்தது என்ன?  

முந்த்ரா துறைமுகம்

ஹெராயின் கடத்தியது யார்? 

சென்னையைச் சேர்ந்த கணவன் -மனைவி இருவர் விஜயவாடாவை மையமாகக் கொண்டு ஒரு நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். அவர்கள்தான் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து குஜராத்துக்கு இந்த போதைப்பொருட்களைக் கடத்தியதாகவும் அவை டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த கிரிமினல் ஜோடிகளான சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா வைஷாலி விஜயவாடாவில் ஒரு இறக்குமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஹெராயின் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஈரானிலிருந்து பாண்ட்ஸ் பவுடர்களை இறக்குமதி செய்வதாகச் சொல்லி இவர்கள் இந்த போதைப்பொருட்களைக் கடத்தியிருக்கிறார்கள்

விசாரணை விரைவில் தொடங்கும் நிலையில் இந்த நெட்வொர்க் பின்னணியில் உள்ள கிங்பின் யார் என்பது தெரியவரும் என்றும் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக சென்னை, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் இதுதொடர்பாக சோதனையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் பட பாணியில் தாதாக்கள் பொருட்களைக் கடத்தும் சீன்கள் ரியல் லைஃபில் இந்தியாவில் நடந்திருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

கொதித்தெழுந்த காங்கிரஸ்: 

இதற்கிடையே அதானி துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதை அடுத்து எதிர்கட்சியான காங்கிரஸ் இதுதொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. '59 கிராம் கஞ்சா வைத்திருந்ததற்காக ஒரு பாலிவுட் நடிகையை வறுத்தெடுத்து வரும் அரசு பப்லோ எஸ்கோபார்கள் இந்தியாவில் உருவாகிவருவதை கண்ணைக்கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது’ என கர்நாடக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

கொலம்பியாவைச் சேர்ந்த கொக்கைன் அரசன் பப்லோ எஸ்கோபார் உலகின் மிகப்பெரும் போதைப்பொருள் சந்தையை நடத்திவந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா... ஐபிஎல் ரத்தாக வாய்ப்பு? 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
Coolie Box Office Collection: 400 கோடி இருக்கட்டும்.. தமிழில் மட்டும் கூலி வசூல் எவ்வளவு? ராஜாங்கம் நடத்தினாரா ரஜினி?
Coolie Box Office Collection: 400 கோடி இருக்கட்டும்.. தமிழில் மட்டும் கூலி வசூல் எவ்வளவு? ராஜாங்கம் நடத்தினாரா ரஜினி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
Coolie Box Office Collection: 400 கோடி இருக்கட்டும்.. தமிழில் மட்டும் கூலி வசூல் எவ்வளவு? ராஜாங்கம் நடத்தினாரா ரஜினி?
Coolie Box Office Collection: 400 கோடி இருக்கட்டும்.. தமிழில் மட்டும் கூலி வசூல் எவ்வளவு? ராஜாங்கம் நடத்தினாரா ரஜினி?
"காச திருப்பி கேட்டான், வெட்டிவிட்டேன் சார்" காஞ்சிபுரம் போலீசை அலறவிட்ட நபர் - நடந்தது என்ன ?
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
புதுச்சேரியில் AIPTF தேசிய மாநாடு: ஆசிரியர்களின் நலன், ஆரோவில் கல்வி, எதிர்கால திட்டங்கள்!
புதுச்சேரியில் AIPTF தேசிய மாநாடு: ஆசிரியர்களின் நலன், ஆரோவில் கல்வி, எதிர்கால திட்டங்கள்!
Embed widget