மேலும் அறிய

பிரிந்து சென்ற மனைவி.. டாஸ்மாக் பாரில் உறவினர்களை வெட்டிக்கொன்ற கணவன்!

முருகனின் அக்காவான தங்கத்தாயை கோமு திருமணம் செய்துள்ளார். அதேபோல் முருகனின் தங்கை மாரியம்மாளை மந்திரம் திருமணம் செய்துள்ளார். மூன்று பேருமே மிக நெருங்கிய உறவினர்களாக இருந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் டாஸ்மாக் மதுபான பாரில் இரண்டு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டாஸ்மாக் பாரில் நடந்த சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினரான மந்திரம் என்பவருடன் இணைந்து தளவாய்புரம் பகுதியில் உள்ள மதுபான கூடம் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர்களது உறவினரான தளவாய்புரத்தைச் சேர்ந்த கோமு என்பவர் அங்கு சென்று முருகன் மற்றும் மந்திரத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

அதாவது என்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள் இருவரும் தான் காரணம் எனக் கூறி அவர் சண்டையிட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோமு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகன் மற்றும் மந்திரத்தை வெட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து மதுபானக் கூடத்தில் மது அருந்திய சிலர் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு முருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மந்திரம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து கோமுவை தேடி வருகின்றனர். 

கொலை வழக்கின் பின்னணி

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், “முருகனின் அக்காவான தங்கத்தாயை கோமு திருமணம் செய்துள்ளார். அதேபோல் முருகனின் தங்கை மாரியம்மாளை மந்திரம் திருமணம் செய்துள்ளார். மூன்று பேருமே மிக நெருங்கிய உறவினர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கோமு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்.

இந்த வழக்கில் விடுதலையான பிறகு விவசாயம் செய்து வந்துள்ளார். அதே சமயம் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர்,  மனைவி தங்கத்தாய் மற்றும் மகன் மாடசாமியிடம் தகராறும் செய்து கொண்டள்ளார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் மாடசாமியை கோமு கத்தியால் குத்த முயன்றார். இதனைத் தடுக்க முயன்ற மனைவியை தாக்கியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் தங்கத்தாய் மற்றும் மகன் மாடசாமி இருவரும் கோமுவை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் வெளியூரில் வசித்து வரும் நிலையில் அவர்கள் பிரிந்து சென்றதற்கு காரணம் முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவர்தான் என கோமு கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி எங்கே இருக்கிறார் என அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் முருகன் மற்றும் மந்திரம் இருவரும் மதுபான பாரில் இருப்பதைக் கண்ட கோமு உள்ளே நுழைந்து என்னுடைய மனைவியை வாழ விடாமல் தடுத்துவிட்டு நீங்கள் இருவரும் மது குடித்து சந்தோஷமாக இருக்கிறீர்களா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை அரிவாளால் வெட்டி உள்ளார்” என்பது தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Embed widget