மேலும் அறிய

சென்னையில் பைக்குளை திருடி ஆந்திராவில் விற்பனை - 85,000 மதிப்புள்ள பைக்குகளை 8,000க்கு விற்றது அம்பலம்

85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை திருடி அதனை வெறும் 8,000 ரூபாய்க்கு ஆந்திராவில் விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 3 பைக்குகள்  திருடு போயின இது குறித்து வாகனத்தின் உரிமையாளர்கள் கொடுங்கையூர் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் திருடு போன 3 இடத்திலும் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தனர். ஒரே கும்பல்  பைக்குகளை  குறிவைத்து திருடுவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
 
இதனை அடுத்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து வியாசர்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முகமது சாதிக் 19 என்ற நபரை கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல  தகவல்கள் வெளிவந்தன  முகமது சாதீக் தனது உறவினரான முஷ்ரப் என்பவருடன் சேர்ந்து சென்னையில்  பைக்குகளை திருடி அதனை ஆந்திரா எல்லைப் பகுதியில் தனது மற்றொரு உறவினரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் 20 என்ற நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் இவர்கள் சென்னைக்கு வந்து விடுவது வழக்கம் அந்த நபர் ஆந்திராவிற்கு பைக்குகளை கொண்டு சென்று மிகக் குறைந்த விலைக்கு விற்று பணத்தை மூன்று பேரும் பிரித்துக் கொள்வதை வழக்கமாக வைத்து இருந்தனர்.
 
இதனை அடுத்து முகமது சித்திக் கொடுத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் ஆந்திரா சென்று இம்தியாசை கைது செய்தனர். மேலும் ஆந்திராவிலிருந்து 11  பைக்குகளை கொடுங்கையூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை திருடி அதனை வெறும் 8,000 ரூபாய்க்கு ஆந்திராவில் விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இம்தியாஸ் , முகமது சித்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முஷ்ரப் என்ற நபரையும் தேடி வருகின்றனர்.
 

வீட்டு வாசலில் மது குடித்ததை தட்டிக் கேட்ட கணவன் மனைவியை தாக்கிய 2பேர் கைது

சென்னை ஓட்டேரி பாஷ்யம் முதல் தெருவை சேர்ந்தவர் டில்லி பாபு (59). இவர் சொந்தமாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். டில்லிபாபு தனது மனைவியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் இரண்டு நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். உடனே டில்லி பாபு ஏன் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மது அருந்திய இரண்டு இளைஞர்களும் டில்லி பாபுவின் முகத்தில் பலமாக தாக்கி உள்ளனர்.  தடுக்க வந்த அவரது மனைவியை யும் தாக்கியுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி இரு வரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பைக்குளை திருடி ஆந்திராவில் விற்பனை - 85,000 மதிப்புள்ள பைக்குகளை 8,000க்கு விற்றது அம்பலம்
 
இதில் டில்லி பாபுவிற்கு மூன்று பற்கள் உடைந்து வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஓட்டேரி சூளைமேடு தெரு பகுதி யை சேர்ந்த பாலாஜி வயது 32 மற்றும் அவரது தம்பி மணிகண்டன் வயது 26 ஆகிய இருவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த ஓட்டேரி போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அண்ணன், தம்பி இருவரையும் நீதிமன்றத்தில ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget