மேலும் அறிய

சென்னையில் பைக்குளை திருடி ஆந்திராவில் விற்பனை - 85,000 மதிப்புள்ள பைக்குகளை 8,000க்கு விற்றது அம்பலம்

85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை திருடி அதனை வெறும் 8,000 ரூபாய்க்கு ஆந்திராவில் விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 3 பைக்குகள்  திருடு போயின இது குறித்து வாகனத்தின் உரிமையாளர்கள் கொடுங்கையூர் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் திருடு போன 3 இடத்திலும் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தனர். ஒரே கும்பல்  பைக்குகளை  குறிவைத்து திருடுவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
 
இதனை அடுத்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து வியாசர்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முகமது சாதிக் 19 என்ற நபரை கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல  தகவல்கள் வெளிவந்தன  முகமது சாதீக் தனது உறவினரான முஷ்ரப் என்பவருடன் சேர்ந்து சென்னையில்  பைக்குகளை திருடி அதனை ஆந்திரா எல்லைப் பகுதியில் தனது மற்றொரு உறவினரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் 20 என்ற நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் இவர்கள் சென்னைக்கு வந்து விடுவது வழக்கம் அந்த நபர் ஆந்திராவிற்கு பைக்குகளை கொண்டு சென்று மிகக் குறைந்த விலைக்கு விற்று பணத்தை மூன்று பேரும் பிரித்துக் கொள்வதை வழக்கமாக வைத்து இருந்தனர்.
 
இதனை அடுத்து முகமது சித்திக் கொடுத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் ஆந்திரா சென்று இம்தியாசை கைது செய்தனர். மேலும் ஆந்திராவிலிருந்து 11  பைக்குகளை கொடுங்கையூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை திருடி அதனை வெறும் 8,000 ரூபாய்க்கு ஆந்திராவில் விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இம்தியாஸ் , முகமது சித்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முஷ்ரப் என்ற நபரையும் தேடி வருகின்றனர்.
 

வீட்டு வாசலில் மது குடித்ததை தட்டிக் கேட்ட கணவன் மனைவியை தாக்கிய 2பேர் கைது

சென்னை ஓட்டேரி பாஷ்யம் முதல் தெருவை சேர்ந்தவர் டில்லி பாபு (59). இவர் சொந்தமாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். டில்லிபாபு தனது மனைவியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் இரண்டு நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். உடனே டில்லி பாபு ஏன் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மது அருந்திய இரண்டு இளைஞர்களும் டில்லி பாபுவின் முகத்தில் பலமாக தாக்கி உள்ளனர்.  தடுக்க வந்த அவரது மனைவியை யும் தாக்கியுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி இரு வரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பைக்குளை திருடி ஆந்திராவில் விற்பனை - 85,000 மதிப்புள்ள பைக்குகளை 8,000க்கு விற்றது அம்பலம்
 
இதில் டில்லி பாபுவிற்கு மூன்று பற்கள் உடைந்து வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஓட்டேரி சூளைமேடு தெரு பகுதி யை சேர்ந்த பாலாஜி வயது 32 மற்றும் அவரது தம்பி மணிகண்டன் வயது 26 ஆகிய இருவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த ஓட்டேரி போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அண்ணன், தம்பி இருவரையும் நீதிமன்றத்தில ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Embed widget