மேலும் அறிய

UP Crime: பர்த்டே பார்ட்டி..! திட்டமிட்டு வரவழைத்து, அடித்து, சட்டையை கிழித்து, சிறுநீர் கழிப்பு - 17 வயது சிறுவன் கொடூர முடிவு

UP Crime: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டதால், 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Crime: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டதால், 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுவன் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி பகுதியில் பிறந்தநாள் விழாவில் அவமானப்படுத்தப்பட்டதால் 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டதாகவும் சிறுவனின் மாமா குற்றம் சாட்டியுள்ளார். புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், ஆனால் அங்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்குப்பதியாத காவல்துறை?

உயிரிழந்த சிறுவனின் மாமா சம்பவம் தொடர்பாக பேசுகையில் பேசிய குடும்பத்தினர், “நாங்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது, ​​எங்கள் புகார் பதிவு செய்யப்படவில்லை. டிசம்பர் 20 ஆம் தேதி சம்பவம் நடந்தது, டிசம்பர் 21 அன்று எங்களுக்குத் தெரியவந்தது.

சம்பவம் நடந்த தினத்தன்று இரவு வீட்டிற்கு வந்த சிறுவன்,  மறுநாள் காலையில் எங்களிடம் முழு விஷயத்தையும் சொன்னான். சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் எங்கள் அழுகை யாருக்கும் கேட்கவில்லை. புகாரை ஏற்கவில்லை. தாக்கிய நபர்கள் மீண்டும் சந்தித்து சித்திரவதை செய்தார்கள், அதன் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான்" என தெரிவித்தனர்.

காவல்துறை விளக்கம்

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டார அலுவலர் பிரதீப் குமார் திரிபாதி தெரிவித்தார். "சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் கப்டங்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணம் பரஸ்பர கருத்து வேறுபாடுகள் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்

15 வயது சிறுவன் தற்கொலை

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தனது பிறந்தநாளில் 15 வயது சிறுவன் தனது தாய் செல்போன் தர மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிராஜ் நகரில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.  அவரது தாயும் சகோதரியும் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இவர், தனது தாயாரிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். சில நிதிப் பிரச்சனைகளால் அவர் வாங்கி தர மறுத்தார். மறுநாள் சிறுவனின் குடும்பத்தினர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கைStudents with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Embed widget