மேலும் அறிய

UP Crime: பர்த்டே பார்ட்டி..! திட்டமிட்டு வரவழைத்து, அடித்து, சட்டையை கிழித்து, சிறுநீர் கழிப்பு - 17 வயது சிறுவன் கொடூர முடிவு

UP Crime: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டதால், 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Crime: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டதால், 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுவன் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி பகுதியில் பிறந்தநாள் விழாவில் அவமானப்படுத்தப்பட்டதால் 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டதாகவும் சிறுவனின் மாமா குற்றம் சாட்டியுள்ளார். புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், ஆனால் அங்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்குப்பதியாத காவல்துறை?

உயிரிழந்த சிறுவனின் மாமா சம்பவம் தொடர்பாக பேசுகையில் பேசிய குடும்பத்தினர், “நாங்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது, ​​எங்கள் புகார் பதிவு செய்யப்படவில்லை. டிசம்பர் 20 ஆம் தேதி சம்பவம் நடந்தது, டிசம்பர் 21 அன்று எங்களுக்குத் தெரியவந்தது.

சம்பவம் நடந்த தினத்தன்று இரவு வீட்டிற்கு வந்த சிறுவன்,  மறுநாள் காலையில் எங்களிடம் முழு விஷயத்தையும் சொன்னான். சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் எங்கள் அழுகை யாருக்கும் கேட்கவில்லை. புகாரை ஏற்கவில்லை. தாக்கிய நபர்கள் மீண்டும் சந்தித்து சித்திரவதை செய்தார்கள், அதன் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான்" என தெரிவித்தனர்.

காவல்துறை விளக்கம்

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டார அலுவலர் பிரதீப் குமார் திரிபாதி தெரிவித்தார். "சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் கப்டங்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணம் பரஸ்பர கருத்து வேறுபாடுகள் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்

15 வயது சிறுவன் தற்கொலை

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தனது பிறந்தநாளில் 15 வயது சிறுவன் தனது தாய் செல்போன் தர மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிராஜ் நகரில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.  அவரது தாயும் சகோதரியும் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இவர், தனது தாயாரிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். சில நிதிப் பிரச்சனைகளால் அவர் வாங்கி தர மறுத்தார். மறுநாள் சிறுவனின் குடும்பத்தினர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget