மேலும் அறிய

Crime: கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுமியை நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்பிய நபர்கள்.! உபி கொடூரம்!

சிறுமியை நிர்வாணமாகவே வீட்டுக்குச் செல்லும்படி அவர்கள் விரட்டிய நிலையில், செய்வதறியாது ஆடையின்றி நிர்வாணமாக அழுது கொண்டே சிறுமி வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை துாக்கிச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், மொராதாபாத் மாவட்டம், போஜ்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழா ஒன்றுக்கு சமீபத்தில் சென்றார்.

அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர் அந்தச் சிறுமியை துாக்கிச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின், அந்தச் சிறுமியை நிர்வாணமாகவே வீட்டுக்குச் செல்லும்படி அவர்கள் விரட்டிய நிலையில், செய்வதறியாது ஆடையின்றி நிர்வாணமாக அழுது கொண்டே சிறுமி வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார்.

இந்தக் காட்சியை சிலர், 'வீடியோ' எடுத்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் குறித்து, சிறுமியின் தாய்மாமன் நேற்று (செப்.21) போஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னதாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், நான்கு இளைஞர்களில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்; மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

 மற்றொரு சம்பவம்

இதேபோல், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரவு பார்ட்டி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய 17 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நான்கு பேர் மெர்சிடீஸ் காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் முன்னதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த மே 28ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட நால்வரும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரையும் அம்மாநில காவல் துறையினர் கைப்பற்றினர்.

முன்னதாக அப்பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தன் வீட்டில் கூறாமலும், சிறுவர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் மட்டுமே கூறிய நிலையில், இது குறித்து வழக்கு பதியப்பட்டது.

ஆனால், தொடர்ந்து சிறுமியின் உடலில் இருந்த காயங்களால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் தன்னிடம் சில சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு போக்சோ வழக்காக மாற்றப்பட்டு சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், தன்னை மருத்துவப் பரிசோதனை செய்த பெண் ஊழியரிடம் தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உண்மையை சிறுமி கூறியது குறிப்பிடத்தக்கது.

போக்சோ சட்டம் : 

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

  • 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  • 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget