மேலும் அறிய

Share Market Today: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை...! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! லாபத்தில் எஸ்.பி.ஐ.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல நாட்களாக பெரும் சரிவில் சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை குறியீடுகள், இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 236.51 புள்ளிகள் உயர்ந்து 59,439.41 புள்ளிகளாகவும், நிஃப்டி 59.50 புள்ளிகள் உயர்ந்து 17,623.5 புள்ளிகளாகவும் இருந்தது.

பங்குச் சந்தை நிலவரம்:

இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 327.9 புள்ளிகள் உயர்ந்து 59,530.80 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 89.65 புள்ளிகள் உயர்ந்து 17,653.60 ஆகவும் உள்ளது.

நிஃப்டியில் ஆக்சிஸ் வங்கி, எம் அண்ட் எம், டைட்டன் நிறுவனம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை லாபத்தில் இருந்தன. அதே நேரத்தில் பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப் மற்றும் திவிஸ் லேப்ஸ் ஆகியவை பின்தங்கியுள்ளன.

ஆனால், கடந்த நாட்களில் பங்குச் சந்தை வீழ்ச்சிகளால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இன்னும் மோசமான நிலையிலே உள்ளது.

தாக்கத்திற்கான காரணம்:

  • ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளின் வர்த்தகம், இதர நாடுகளுடன் பெரிதும் பாதித்தது. இதன் காரணமாக பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வுக்கு வழி வகுத்தது.
  • உலகளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றால், பொதுமுடக்கம் ஏற்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்குள்ளானது.
  • இந்த நிலையில், உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை சில நாட்களுக்கு முன் உயர்த்தியது.

இதனால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் வெளியேறினர். சந்தைகளிலிருந்து வெளியேறியதற்கான காரணம், அமெரிக்க வங்கியில் பணம் வைத்தால் ஆதாயம் அதிகம் என்பதால்தான்.

உயர்ந்த டாலர் மதிப்பு:

அயல்நாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறியதன் காரணமாக, டாலர் கரன்சிகள் இந்தியாவை விட்டுச் சென்றன. இதனால் இந்தியாவுக்கு டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்ததாலும், பற்றாக்குறை காணப்பட்டதாலும் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், சந்தையில் தக்காளி வரத்து குறைந்தால் விலை உயர்கிறது, அதேபோன்றுதான் டாலரின் மதிப்பும் உயர்ந்தது. 

இந்த தாக்கத்தால் இந்திய ரூபாய் மட்டுமன்றி, உலகத்தில் உள்ள பல்வேறு கரன்சிகளும் வரலாறு காணாத சரிவை சந்தித்தன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், பெரும்பாலும் டாலரின் மதிப்பில்தான் வாங்குகிறோம். ஆகையால், டாலரின் மதிப்பு உயரும் போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் டாலருக்கு எதிரான, இந்தி ரூபாயின் மதிப்பானது 82.91 ஆகவுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 

குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில், இந்தியா உலக அளவில் மூன்றாவது நாடாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சமையல் எண்ணெய் உள்ளிட்ட இதர இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பங்குச் சந்தைகள் சில தினங்களாக சற்று அதிகரித்து வருவது, முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (29.05.2026): வெள்ளி.. யோகம் அடிக்குமா? யோசிச்சுட்டு போயிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (29.05.2026): வெள்ளி.. யோகம் அடிக்குமா? யோசிச்சுட்டு போயிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (28.05.2026): அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுக்குமா? ஆப்பு வைக்குமா? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (28.05.2026): அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுக்குமா? ஆப்பு வைக்குமா? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold Silver Rate May 28th: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget