மேலும் அறிய

Share Market Today: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை...! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! லாபத்தில் எஸ்.பி.ஐ.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல நாட்களாக பெரும் சரிவில் சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை குறியீடுகள், இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 236.51 புள்ளிகள் உயர்ந்து 59,439.41 புள்ளிகளாகவும், நிஃப்டி 59.50 புள்ளிகள் உயர்ந்து 17,623.5 புள்ளிகளாகவும் இருந்தது.

பங்குச் சந்தை நிலவரம்:

இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 327.9 புள்ளிகள் உயர்ந்து 59,530.80 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 89.65 புள்ளிகள் உயர்ந்து 17,653.60 ஆகவும் உள்ளது.

நிஃப்டியில் ஆக்சிஸ் வங்கி, எம் அண்ட் எம், டைட்டன் நிறுவனம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை லாபத்தில் இருந்தன. அதே நேரத்தில் பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப் மற்றும் திவிஸ் லேப்ஸ் ஆகியவை பின்தங்கியுள்ளன.

ஆனால், கடந்த நாட்களில் பங்குச் சந்தை வீழ்ச்சிகளால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இன்னும் மோசமான நிலையிலே உள்ளது.

தாக்கத்திற்கான காரணம்:

  • ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளின் வர்த்தகம், இதர நாடுகளுடன் பெரிதும் பாதித்தது. இதன் காரணமாக பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வுக்கு வழி வகுத்தது.
  • உலகளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றால், பொதுமுடக்கம் ஏற்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்குள்ளானது.
  • இந்த நிலையில், உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை சில நாட்களுக்கு முன் உயர்த்தியது.

இதனால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் வெளியேறினர். சந்தைகளிலிருந்து வெளியேறியதற்கான காரணம், அமெரிக்க வங்கியில் பணம் வைத்தால் ஆதாயம் அதிகம் என்பதால்தான்.

உயர்ந்த டாலர் மதிப்பு:

அயல்நாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறியதன் காரணமாக, டாலர் கரன்சிகள் இந்தியாவை விட்டுச் சென்றன. இதனால் இந்தியாவுக்கு டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்ததாலும், பற்றாக்குறை காணப்பட்டதாலும் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், சந்தையில் தக்காளி வரத்து குறைந்தால் விலை உயர்கிறது, அதேபோன்றுதான் டாலரின் மதிப்பும் உயர்ந்தது. 

இந்த தாக்கத்தால் இந்திய ரூபாய் மட்டுமன்றி, உலகத்தில் உள்ள பல்வேறு கரன்சிகளும் வரலாறு காணாத சரிவை சந்தித்தன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், பெரும்பாலும் டாலரின் மதிப்பில்தான் வாங்குகிறோம். ஆகையால், டாலரின் மதிப்பு உயரும் போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் டாலருக்கு எதிரான, இந்தி ரூபாயின் மதிப்பானது 82.91 ஆகவுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 

குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில், இந்தியா உலக அளவில் மூன்றாவது நாடாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சமையல் எண்ணெய் உள்ளிட்ட இதர இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பங்குச் சந்தைகள் சில தினங்களாக சற்று அதிகரித்து வருவது, முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget