![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
9 நாட்களாக பெட்ரோலும், 10 நாளாக டீசலும்.. மாற்றமின்றி தொடரும் விலை நிலவரம்..!
சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து 9-வது நாளாகவும், டீசல் தொடர்ந்து 10-வது நாளாகவும் மாற்றமின்றி தொடர்ந்து அதே விலையில் விற்கப்படுகிறது.
![9 நாட்களாக பெட்ரோலும், 10 நாளாக டீசலும்.. மாற்றமின்றி தொடரும் விலை நிலவரம்..! petrol and diesel price status today 9 நாட்களாக பெட்ரோலும், 10 நாளாக டீசலும்.. மாற்றமின்றி தொடரும் விலை நிலவரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/8d44277e2caf6da8b50d4b97e779f28d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. பெட்ரோல் விலையில் தொடர்ந்து 9வது நாளாக மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசலை பொறுத்தவரை தொடர்ந்து 10-வது நாளாக எந்த மாற்றமுமின்றி ரூபாய் 94.39க்கும் விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது முதல் (மே 2), தற்போது வரை கிட்டத்தட்ட 40 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
![9 நாட்களாக பெட்ரோலும், 10 நாளாக டீசலும்.. மாற்றமின்றி தொடரும் விலை நிலவரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/05d0a44c2cf47369e2ce9d041a45efc8_original.jpg)
![9 நாட்களாக பெட்ரோலும், 10 நாளாக டீசலும்.. மாற்றமின்றி தொடரும் விலை நிலவரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/011513193955d5e8cbca03a71b843980_original.jpg)
முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)