மேலும் அறிய

Petrol Diesel Price Today: விரைவில் மாற்றம் நிகழுமா? - சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Petrol Diesel Price Today, January 25: பெட்ரோல், டீசல் இன்று எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Petrol Diesel Price Today, January 25: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 25ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 614வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MI Vs GT: டேபிள் டாப்பர் யார்? குஜராத்தை பழிவாங்குமா மும்பை? டெல்லிக்கு ராஜயோகம், மழையால் பாதித்த SRH
MI Vs GT: டேபிள் டாப்பர் யார்? குஜராத்தை பழிவாங்குமா மும்பை? டெல்லிக்கு ராஜயோகம், மழையால் பாதித்த SRH
MHA Order Mock Drills: வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
Vande Bharat Update: சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஒரு சூப்பர் அப்டேட்.. இனி தாராளமா டிக்கெட் கிடைக்கும்...
சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஒரு சூப்பர் அப்டேட்.. இனி தாராளமா டிக்கெட் கிடைக்கும்...
IPL 2025 SRH vs DC: கலக்கிய கம்மின்ஸ்.. சன்ரைசர்ஸா இப்படி பந்து போட்டது? 133 ரன்களுக்கு சுருண்ட டெல்லி
IPL 2025 SRH vs DC: கலக்கிய கம்மின்ஸ்.. சன்ரைசர்ஸா இப்படி பந்து போட்டது? 133 ரன்களுக்கு சுருண்ட டெல்லி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புலம்பிய திமுக நிர்வாகிகள்! உடனே ஆக்‌ஷன் எடுத்த ஸ்டாலின்! அமைச்சர்களிடம் கறார்Madurai Aadheenam: திட்டமிட்டு கொல்ல முயற்சியா? குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம்! வெளியான CCTV காட்சிADMK TVK Alliance | அதிமுக பாஜக கூட்டணியில் தவெக?அமித்ஷா போட்ட ஆர்டர்! விஜய்-க்கு தூது விட்ட இபிஎஸ்CRPF MunirAhmed: பாக்.,பெண்ணுடன் திருமணம்!சிக்கலில் தவிக்கும் CRPF வீரர்! மத்திய அரசு அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI Vs GT: டேபிள் டாப்பர் யார்? குஜராத்தை பழிவாங்குமா மும்பை? டெல்லிக்கு ராஜயோகம், மழையால் பாதித்த SRH
MI Vs GT: டேபிள் டாப்பர் யார்? குஜராத்தை பழிவாங்குமா மும்பை? டெல்லிக்கு ராஜயோகம், மழையால் பாதித்த SRH
MHA Order Mock Drills: வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
Vande Bharat Update: சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஒரு சூப்பர் அப்டேட்.. இனி தாராளமா டிக்கெட் கிடைக்கும்...
சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஒரு சூப்பர் அப்டேட்.. இனி தாராளமா டிக்கெட் கிடைக்கும்...
IPL 2025 SRH vs DC: கலக்கிய கம்மின்ஸ்.. சன்ரைசர்ஸா இப்படி பந்து போட்டது? 133 ரன்களுக்கு சுருண்ட டெல்லி
IPL 2025 SRH vs DC: கலக்கிய கம்மின்ஸ்.. சன்ரைசர்ஸா இப்படி பந்து போட்டது? 133 ரன்களுக்கு சுருண்ட டெல்லி
Actor Goundamani: ஓடி வந்த விஜய்.. கவுண்டமணியை கட்டியணைத்து ஆறுதல்
Actor Goundamani: ஓடி வந்த விஜய்.. கவுண்டமணியை கட்டியணைத்து ஆறுதல்
IPL 2025 SRH vs DC:டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்குமா சன்ரைசர்ஸ்? கில்லி போல பேட்டிங் செய்யுமா அக்ஷர் படை?
IPL 2025 SRH vs DC:டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்குமா சன்ரைசர்ஸ்? கில்லி போல பேட்டிங் செய்யுமா அக்ஷர் படை?
Israel to Capture Gaza: இனி என்ன நடக்கப் போகுதோ.!? காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்...
இனி என்ன நடக்கப் போகுதோ.!? காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்...
சப்போர்ட்டுக்கு நாங்க வர்ரோம்..பிரதமர் மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புதின்!.ஷாக்கில் பாகிஸ்தான்!
சப்போர்ட்டுக்கு நாங்க வர்ரோம்..பிரதமர் மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புதின்!.ஷாக்கில் பாகிஸ்தான்!
Embed widget