மேலும் அறிய

NSE co-location scam: இப்படி ஊழல் நடந்தால், இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்? - சிறப்பு நீதிபதி கேள்வி

தேசியப் பங்குச் சந்தையில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கு நேற்று சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

தேசியப் பங்குச் சந்தையில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கு நேற்று சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி “இதுபோன்ற ஊழல்கள் நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 2013 முதல் 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது பல பல ஊழல்கள் தேசிய பங்குச்சந்தையில் நடந்துள்ளன. தேசிய பங்குச் சந்தையின் முக்கியமான தகவல்களை இமயமலை யோகி என்பவரிடம் பகிர்ந்த ஊழலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்தபோது சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியது. தனிப்பட்ட முறையில் அவர் சில நபர்களை பணி நியமனம் செய்தது முதல்  தேசிய பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்ட தகவல் பகிர்வு வரை அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீள்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஆனந்த சுரமணியம் என்பவரை மார்ச் 23 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், “இந்த வழக்கு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்? இதன் அளவு என்ன? ரூ.1,000 கோடியா? எனக்குத் தெரியாது. நிச்சயம் பெரியதாக இருக்கும். இது ஒரு சிறிய மோசடி அல்ல. நாட்டின் நற்பெயருக்கு ஆபத்து விளைவித்திருக்கிறது. மக்கள் தங்கள் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். NSE நியாயமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஊழலும் மோசடிகளும் நடக்கிறது என்று தெரிந்தால், யார் நம் நாட்டில் பணத்தை முதலீடு செய்வார்கள்? இந்த விசாரணையை நீங்கள் மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்கிறீர்கள். இப்படியே இது குறித்து நீங்கள் நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்திக் கொண்டே இருக்கக் கூடாது. விசாரணையை விரைந்து முடித்திட வேண்டும். இப்படி நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்?” என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிபிஐ விசாரணை மெதுவாக நடப்பதை விமர்சித்த நீதிமன்றம், “இந்த விசாரணை இன்னும் பல ஆண்டுகளாக தொடருமா? இதனால் நமது நம்பகத்தன்மை அனைத்தும் காணாமல் போய்விடும். முதலீட்டாளர்கள் அனைவரும் சீனாவுக்குச் சென்றுவிடுவார்கள் என்று சொன்னார்.

இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ஓபிஜி செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும் விளம்பரதாரருமான சஞ்சய் குப்தா மற்றும் பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. குப்தா 2010 மற்றும் 2014 க்கு இடையில் தேசியப் பங்குச் சந்தையின் சர்வர் கட்டமைப்பை தவறாக பயன்படுத்தினார். தேசியப் பங்குச் சந்தையின்  அதிகாரிகளுடன் சதியில் ஈடுபட்டார் மற்றும் செபி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார் என்றும் இந்த வழக்கில் பல்வேறு குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget