மேலும் அறிய

டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி… வருடாந்திர சம்பள உயர்வை அறிவித்தது நிறுவனம்!

நிறுவனம் இந்த ஆண்டு பெரிய எண்ணிக்கையிலான நபர்களை பணியமர்த்தாது என்றும், அதற்கு பதிலாக கடந்த ஆண்டு எடுத்த நபர்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவைகள் மற்றும் மாபெரும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான Tata Consutency Services (TCS) ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக, தனது வருடாந்திர சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

டிசிஎஸ் ஊதிய உயர்வு

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஜூன் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடும் போது, அதன் செயல்பாட்டு வரம்பில் 200 அடிப்படை புள்ளிகளின் தாக்கம் இருந்த நிலையிலும், ஊழியர்களின் நலனுக்காக சம்பள உயர்வை வழங்குவதாகக் கூறியது. டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் நிறுவன ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளோம். இதனால் எங்களது செயல்பாட்டு வரம்பு 200 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 23.2% ஆக உள்ளது. ஊழியர்களின் மேம்பட்ட செயல்திறன் மூலம் இது வரும்காலங்களில் ஈடுசெய்யப்படும் என்று TCS CFO சமீர் செக்ஸாரியா உறுதிகூறினார்.

டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி… வருடாந்திர சம்பள உயர்வை அறிவித்தது நிறுவனம்!

இழப்பை ஈடுகட்டலாம்

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமீர் செக்சாரியா கூறுகையில், "ஊழியர்களின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் இந்த இழப்பை ஈடுகட்ட முடிவு செய்துள்ளோம். டிசிஎஸ் நிறுவனம் சமீபத்திய வருடாந்திர சம்பள உயர்வு மதிப்பாய்வு அடிப்படையில், சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு சுமார் 12-15 சதவீத சம்பள உயர்வை வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்தோருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது," என்றார்.

தொடர்புடைய செய்திகள்: VJS50 Title Maharaja: தென்மேற்கு பருவக்காற்றில் தொடங்கிய பயணம்.. பாலிவுட்டில் ஜவான்.. வெளியானது விஜய் சேதுபதியின் 50-வது பட டைட்டில்

புதிய பணியமர்த்தல்கள் இருக்காது

சமீபத்திய வருடாந்திர இழப்பீட்டு மதிப்பாய்வில் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்திறன் 12-15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதோடு நிறுவனம் இந்த ஆண்டு பெரிய எண்ணிக்கையிலான நபர்களை பணியமர்த்தாது என்றும், அதற்கு பதிலாக கடந்த ஆண்டு எடுத்த நபர்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார். "நாங்கள் வழங்கிய அனைத்து சலுகைகளையும் மதிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், கடந்த ஆண்டு நாங்கள் உருவாக்கிய திறனை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் இருக்கும்" என்று நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் கூறினார்.

டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி… வருடாந்திர சம்பள உயர்வை அறிவித்தது நிறுவனம்!

ஏன் இந்த நிலை?

ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடையேயான மூன்று மாதங்களில் நிறுவனம் வெறும் 523 புதிய ஊழியர்களை மட்டுமே நியமித்துள்ளது. இப்போது அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6.15 லட்சமாக உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து திடீரென ஏற்பட்ட ஒப்பந்தங்களைச் சமாளிக்க முடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவு பணியமர்த்தப்பட்டதன் விளைவாக இப்படி நடந்து வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லக்காட் கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget