Gold Rate Historic Peak: அட சாமி.. இப்படி ஏறிட்டே போனா எப்படி.? ஒரு End இல்லையா.! வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை
தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்ச விலையை அடைந்துள்ளது. ஒரு சவரன் 87 ஆயிரம் ரூபாயை தாண்டி பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினம்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தொடர் விலை உயர்வை சந்தித்து, புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இன்றும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 87 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய உச்சங்களை தொட்டுவரும் தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களில் புதிய உச்ச விலைகளை தங்கம் தொட்டு வருகிறது. கடந்த 25-ம் தேதி ஒரு கிராம் 10,510 ரூபாயாகவும், சவரன் 84,080 ரூபாயாகவும் இருந்த தங்கத்தின் விலை, 26-ம் தேதி விலை உயர்ந்து, கிராம் 10,550 ரூபாய்க்கு சென்றது. ஒரு சவரன் 84,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 27-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,640 ரூபாய்க்கும், ஒரு சவரன் விலை 85 ஆயிரத்தை கடந்து, 85,120 ரூபாய் என உச்சத்தை அடைந்தது. பின்னர், 28-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், 29-ம் தேதி இரு முறை விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் புதிய உச்ச விலையாக 86 ஆயிரத்தை கடந்து, 86,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், நேற்று மேலும் உயர்ந்து, புதிய உச்ச விலையை எட்டியது.
அதன்படி, நேற்று தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,860 ரூபாய் என்ற புதிய உச்ச விலையிலும், ஒரு சவரன் தங்கம் 86,880 ரூபாய் என்ற வரலாறு காணாத புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் இன்றைய(01.10.25) விலை என்ன.?
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 10,890 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 87,120 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலையில் விற்பனையாகிறது.
இதனால், பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியே விலை ஏறிக்கொண்டிருந்தால், இனி எப்படி தங்கம் வாங்குவது என்று கவலையடைந்துள்ளனர்.
புதிய உச்சத்திலேயே தொடரும் வெள்ளி விலை
தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு, வெள்ளி விலையும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 25-ம் தேதி ஒரு கிராம் 150 ரூபாயாக இருந்த வெள்ளி, 26-ம் தேதி 3 ரூபாய் உயர்ந்து, கிராம் 153 ரூபாயாக ஆனது.
தொடர்ந்து, 27-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 6 ரூபாய் உயர்ந்து, புதிய உச்ச விலையாக 159 ரூபாயை எட்டியது. 28-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையி, 29-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 160 ரூபாக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், 30-ம் தேதியான நேற்று மீண்டும் ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 161 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து, அக்டோபர் 1-ம் தேதியான இன்று வெள்ளி அதே உச்ச விலையில் நீடிக்கிறது.



















