Upcoming E Scooters: இன்னும் 6 மாசம்தான்! இந்தியாவில் வரப்போகும் அசத்தலான E Scooters லிஸ்ட்! என்னென்ன?
இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் சந்தையில் அறிமுகமாக உள்ள மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்களை கீழே காணலாம்.

சென்னையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு சவால் தரும் வகையில் பல்வேறு மின்சார வாகனங்களும் சந்தையில் உற்பத்தியாகி விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் அடுத்த 6 மாத காலத்திற்குள் விற்பனைக்கு வர உள்ள மின்சார ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. Simple Energy Arrive:
இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்று Simple Energy. இவர்களின் பல்வேறு இ ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் வரவேற்பு உள்ள நிலையில், புதியதாக அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர் Simple Energy Arrive. இந்த மின்சார ஸ்கூட்டர் வரும் ஜுன் மாதம் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. Ather EL Scooter:
இந்தியாவின் பிரபலமான முக்கியமான மின்சார வாகன நிறுவனம் ஏதர். இவர்கள் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Ather EL Scooter. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக உள்ளது.
3. TVS Jupiter Electric:
இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்வது டிவிஎஸ். இவர்களின் வெற்றிகரமான ஸ்கூட்டர் ஜுபிட்டர். இந்த ஸ்கூட்டரின் மின்சார வெர்சன் TVS Jupiter Electric. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை ஆகும். இந்த இ ஸ்கூட்டர் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
4. Suzuki Burgman Street Electric
சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Suzuki Burgman Street. இந்த ஸ்கூட்டரின் மின்சார வெர்சனாக உருவாகி வருகிறது Suzuki Burgman Street Electric. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை ஆகும். இந்த இ ஸ்கூட்டர் வரும் டிசம்பர் மாதம் விற்பனையாகும் என்று கருதப்படுகிறது.
இந்த இ ஸ்கூட்டர்களின் மைலேஜ், பேட்டரி திறன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இந்த தகவல் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் மைலேஜை அதிகரிக்கும் வகையில் இந்த வாகனங்களை ஒவ்வொரு நிறுவனங்களும் தயாரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















