மேலும் அறிய

அம்பை அருகே அறுவடை பருவம் நெருங்கும் நேரத்தில் நெற்பயிர்களை நாசம் செய்த யானைகள் - கவலையில் விவசாயிகள்

ஒரு ஏக்கர் நெல் பயிரிட சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு வருகின்றோம்.

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் உள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மலையடிவாரத்தையொட்டிய பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வதோடு ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் கரடி, காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.   இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. குறிப்பாக சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்களில் யானைகள் தங்கள் குட்டிகளுடன் வந்து  பயிர்களை  சேதப்படுத்தியதோடு,  அனைத்து பயிர்களையும்  அழித்து  நாசம் செய்து உள்ளது. 


குறிப்பாக மலைப்பகுதிகளில் இருந்து கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக இறங்கி வந்து மலை அடிவாரங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நாசம் செய்து வருவதாகவும், தற்போது நாசம் செய்துள்ள நெல் பயிர்களின் மதிப்பு பல ஆயிரம் இருக்கும் எனவும் அங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


அம்பை அருகே அறுவடை பருவம் நெருங்கும் நேரத்தில் நெற்பயிர்களை நாசம் செய்த யானைகள் - கவலையில் விவசாயிகள்

 

இது குறித்து விவசாயிகள் கூறும் பொழுது, "எங்களுக்கு வாழ்வாதாரமே விவசாயம் தான், இந்த  விவசாயத் தொழிலை தான் நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். குறிப்பாக பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றோம். பார்த்து பார்த்து வளர்த்து வரும் நெற்பயிரை ஒரே இரவில் நாசம் செய்து விடுகிறது. ஒரு ஏக்கர் நெல் பயிரிட சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு வருகின்றோம். அதோடு தற்போது பயிரிட்ட நெல் பயிர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நேரத்தில் யானைகள் கூட்டமாக வந்து எங்களது விளைநிலங்களை சீரழித்து வருகிறது. இதனை தமிழக அரசும், வனத்துறையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி மற்றும் அகழிகள் அமைத்து தர வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் உயிர் வாழ முடியும். விவசாயத்தை காக்க முடியும். எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர். மேலும், தற்போது மலையில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget