Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி! "நடைபாதையில் வண்டி ஓட்டுவியா" ஆக்ஷனில் இறங்கிய மூதாட்டி
கேரளாவில் நடைபாதை சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரை காலால் தடுத்து நிறுத்தி சாலையில் செல்ல வைத்த மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து கேரள போக்குவரத்து போலீசார் மூதாட்டிக்கு சால்வை அணிவித்து கௌரவித்துள்ளனர்.
கேரளாவில் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சில இருசக்கர வாகனங்கள் நடைபாதையில் சென்று கொண்டிருந்தன. அப்போது நடைபாதையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவர், அவ்வழியில் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்தார். ஆனால் அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றதால் மூதாட்டி தனது காலால் தடுத்தி நிறுத்தினார். பின்னர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அந்த மூதாட்டி.
இதனையடுத்து அந்த நபர் சாலையில் வண்டியை ஓட்டிச்சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கேரள போக்குவரத்து போலீசார் அந்த மூதாட்டி கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபாவதி அம்மா என்பதை கண்டறிந்து அவரது வீட்டுக்கே சென்று அவருக்கு சாலை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும் நடைபாதையில் வாகனம் ஓட்டிச்சென்ற அந்த நபருக்கு கேரள போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவரது லைசண்ஸை ரத்து செய்ததோடு அவரை 1 வாரம் வாகனம் ஓட்டும் விதிகள் குறித்























