மேலும் அறிய

Dharmapuri Murder | காதல் விவகாரம்..கத்தியால் குத்திய அண்ணன்கள்.. பகீர் கிளப்பும் பின்னணி

தருமபுரியில் சகோதரி காதலனை அவர் பணியாற்றும் உணவகத்திற்கே சென்று அப்பெண்ணின் சகோதரர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  இந்த வழக்கில் இரட்டை சகோதரர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பான வாக்குமூலங்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் கடந்த 6 ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரபல பிரியாணி  ஓட்டலில் கிரில் மாஸ்டராக தருமபுரி சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் இரவு 9 மணிக்கு ஓட்டலுக்கு  4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து ஓட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்து விலகி நின்றனர். இதனை தொடர்ந்து கத்தியால் குத்திய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் ரேடவ் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஹோட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை செய்யும் சம்பவம் சிசிடிவி காசியில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  அப்போது முகமது ஆசிப் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் சகோதரர்கள் முகமது ஆசிப்பை கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ஓமலூரைச் சேர்ந்த ஆசிப் காதலித்த பெண்ணின் சகோதரர்கள் தான் என காவல் துறையினர் விசாரணையில் உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் ஓமலூர் சென்று விசாரணை நடத்தி சேலம் பகுதியில் பதுங்கி இருந்த ஜனரஞ்சன்,  ஜன அம்சபிரியன் இரட்டை சகோதரர்களை குறித்து விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணையில் முகமது ஆசிப் தனது சகோதரியை காதலித்து வந்ததாகவும் பலமுறை கண்டித்தும் கேட்காததால், இரட்டை சகோதரர்கள் ஜனரஞ்சன், ஜன அம்சபிரியன் இருவரும் முகமது அசிப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது ஆசிப் வேலை செய்கின்ற பிரியாணி கடைக்கு, நண்பர்கள் கௌதம் (28), மற்றும்  நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுயை சேர்ந்த பரிதிவளவன் (24) ஆகியோருடன்  பிரியாணி ஒட்டலின் உள்ளே நுழைந்து, முகமது ஆசிப்பை அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றது, காவல் துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஒமலூர் அடுத்த செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜனரஞ்சன், ஜன அம்சபிரியன், மற்றும் கௌதம், பரிதி வளவன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தருமபுரி அருகே சகோதரி காதலித்த இளைஞரை, பெண்ணின் இரட்டை சகோதரர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி வீடியோக்கள்

MLA vs People | ‘’ஊருக்குள்ள வராதீங்க!’’சுத்துப்போட்ட மக்கள் திணறிய MLA
MLA vs People | ‘’ஊருக்குள்ள வராதீங்க!’’சுத்துப்போட்ட மக்கள் திணறிய MLA
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Cabinet Ministry: இனி கவலை வேண்டாம் - 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு - மத்திய அரசு
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்..
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்..
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
Nalla Neram Today Sep 12: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget