மேலும் அறிய

Tokyo Olympics 2020: ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைந்த கொரோனா.. 2 வீரர்களுக்கு பாசிட்டிவ்..!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  டோக்கியோ ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கான கிராமம் திறக்கப்பட்டு அங்கு மெல்ல அனைத்து நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது சில நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அங்கு தங்கியுள்ளனர். இந்தியாவில் இருந்து நேற்று 88 வீரர் வீராங்கனைகளுடம் கூடிய குழு நேற்று டோக்கியோ புறப்பட்டது. 

இந்நிலையில் டோக்கியோவில் வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் விளையாட்டு வீரர் இல்லை. ஆனால் தற்போது இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு அங்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரே விளையாட்டில் பங்கேற்க உள்ளவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  அந்த நாட்டைச் சேர்ந்த மற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் தற்போது கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tokyo Olympics 2020: ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைந்த கொரோனா.. 2 வீரர்களுக்கு பாசிட்டிவ்..!

இதன் காரணமாக விளையாட்டு கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரப்படுத்தப்படுள்ளன. தற்போது வரை ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில் அங்கு கொரோனா வைரஸ் தடுப்பில் ஒலிம்பிக் குழு மிகவும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஒலிம்பிக் குழு, "கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். குறிப்பாக மக்கள் யாருமே இந்த விளையாட்டு கிராம பகுதிக்கு அருகே வர முடியாது. மேலும் பல கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளோம்" எனக் கூறியுள்ளனர். 


Tokyo Olympics 2020: ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைந்த கொரோனா.. 2 வீரர்களுக்கு பாசிட்டிவ்..!

டோக்கியோ நகருக்கு தற்போது வரை வீரர் வீராங்கனைகள் மற்றும் பத்திரிகையளர்கள், பயிற்சியாளர்கள் என சராசரியாக 18ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். இவர்களில் சுமார் 9 ஆயிரம் முதல் 11 பேர் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்க உள்ளனர். எனவே அங்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது ஒலிம்பிக் போட்டிகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி சார்பில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளும் நேற்று இரவு கிளம்பி இன்று காலை டோக்கியோ சென்றடைந்துள்ளனர். இந்தச் சூழலில் அங்கு வீரர்கள் சிலருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: இன்னும் 5 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: டோக்கியோ புறப்பட்ட இந்தியப் படை !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget