மேலும் அறிய

Avesh Khan | "கட்டிப்பிடித்து 'சாரி' சொன்னார் ரிஷப் பண்ட்" : டெல்லியில் இருந்து லக்னோ அணிக்கு சென்ற ஆவேஷ்!

கடந்த ஆண்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த பந்த், இந்த வருடம் ஆவேஷ் கானை ஏலத்தில் திரும்ப வாங்கமுடியாமல் போனதற்கு, "சாரி" எனக்கூறி கட்டிப்பிடித்ததாக கூறினார்.

ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடந்தன. இந்த சீசனில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக ஆடுகின்றன. எனவே மொத்தம் 10 அணிகளும் சேர்ந்து மொத்தமாக 551.7 கோடி கொடுத்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக இஷான் கிஷனை ரூ.15.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. தீபக் சாஹருக்கு ரூ.14 கோடி கொடுத்தது சிஎஸ்கே. ஷ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது. வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான்.

இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2வது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார். டெல்லியில் கடந்த வருடம் பந்துவீச்சில் கவனிக்க வைத்த வீரர் ஆவேஷ் கானை லக்னோ போட்டி போட்டு 10 கோடிக்கு எடுத்தது. இவர் அன்கேப்டு வீரர்கள் லிஸ்டில் அதிக விலைக்கு போனவர் என்ற பெருமையை பெற்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)

அவர் சமீபத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் இதழுக்கு கொடுத்த பேட்டியில், "கடந்த ஆண்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த பந்த், இந்த வருடம் ஆவேஷ் கானை ஏலத்தில் திரும்ப வாங்க முடியாமல் போனதற்கு, "சாரி" எனக்கூறி கட்டிப்பிடித்ததாக கூறினார். “விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கிய பிறகு, நான் ரிஷப்பை விமான நிலையத்தின் வெளியே சந்தித்தேன், அவர் என்னைக் கட்டிப்பிடிப்பதற்காக அவரது கைகளை விரித்தார். அவர் என்னிடம், ‘மன்னிக்கவும், உன்னை மீண்டும் ஏலத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டது' என்றார். ஏனெனில், அணியிடம் போதுமான பணமும் மீதம் இல்லை, அதுமட்டுமின்றி அதன் பிறகு வாங்குவதற்கு வீரர்களும் இருந்தனர். நான் ஏலத்தைப் பார்த்தபோது, ​​அவர்கள் எனக்காக 8.75 கோடி வரை இறுதி ஏலம் கேட்டதை கண்டேன், ஆனால் லக்னோ அதைவிட அதிகபட்சமாக ஏலம் எடுத்தது,” என்று அவேஷ் கூறினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Delhi Capitals (@delhicapitals)

உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்திற்காக விளையாடும் வலது கை வேகப்பந்து வீச்சாளர், இது தனக்கு ஒரு "உணர்ச்சிகரமான" தருணம் என்று கூறினார். “ரிஷப்புடன் இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்; நாங்கள் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடியிருக்கிறோம். போட்டிகள் நடந்து முடிந்த பிறகு, நாங்கள் ஒன்றாக நிறைய பேசி இருக்கிறோம், ஒன்றாக வெளியே சென்றிருக்கிறோம், ”என்று அவேஷ் நினைவுகளை பகிறந்தார். மேலும் டெல்லியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலை "மிஸ்" செய்வதாக அவேஷ் கூறினார். "டெல்லி கேபிடல்ஸுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருந்ததால் 'ரிக்கி பாண்டிங் அண்ட் கோ'வை அதிகமாக மிஸ் செய்வேன்." என்று கூறியிருந்தார். ஐபிஎல் 2021ல் 7.37 என்ற நல்ல எக்கனாமி விகிதத்தில் 16 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை அவேஷ் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget