மேலும் அறிய

Jio Cinema: 'கிரிக்கெட் எங்க உயிருக்கும் மேல’ .. கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை வெளிக்காட்டிய ஜியோ சினிமா..!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது மொத்தம் 3.2 கோடி பார்வையாளர்களை பெற்று ஜியோ சினிமா செயலி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது மொத்தம் 3.2 கோடி பார்வையாளர்களைப் பெற்று ஜியோ சினிமா புதிய சாதனைப் படைத்துள்ளது .

நேற்று முன் தினம் (29.05.23) சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில்  ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்றது. கடந்த 28 ஆம் தேதி நிகழவிருந்த இந்த போட்டி மழைகாரணத்தினால் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் முதல் இன்னிங்ஸில் குஜராத் 214 ரன்கள் எடுத்தது. சென்னை அணி ஆட்டத்தைத் தொடங்கிய சில நேரத்தில் மழை ஆட்டத்தை இடைமறித்தது. போட்டி தொடருமா இல்லையா என்கிற குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருந்தார்கள். பின் மழை நின்ற பிறகு போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.  

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்றாக இது இருந்தது. சென்னை அணி  ரசிகர்கள் கதறி அழுத காட்சிகள் அனைவரின் மனதையும் கலங்கடித்தது. தல தோனி எந்த வார்த்தையும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார். இது அவரது கடைசி போட்டியாக இருக்குமோ என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த வெற்றி அவருக்கு மட்டும் இல்லை அனைவருக்கும் முக்கியமானது. இரண்டு பந்துகளில் மொத்தம் 10 ரன்கள் தேவை. ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐ.பி. எல் இல் ஜடேஜா மிக சுமாரான ஃபார்மில் இருந்திருக்கிறார். மேலும் அவர் விளையாட வரும்போது எல்லாம் ரசிகர்கள் அவரை ஆட்டமிழக்கச் சொல்லும் வகையில் அவருக்கு அடுத்து வரும் தோனி பெயரை கத்தினார்கள். இது குறித்து ஜடேஜா வெளிப்படையாக  சற்று நகைச்சுவையாகவேகூட கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கிடையில் தோனி மற்றும் ஜடேஜாவிற்கு இடையில் ஏதோ கருத்து வேறுபாடு நிகழ்ந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா மற்றும் அவரது மனைவி மறைமுகமாக வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பின.

இது எல்லாம் முடிந்து இறுதியாக இரண்டு பந்துகளில் பத்து ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழ்நிலையில் நிற்கிறார் ஜடேஜா. முதல் பந்து சிக்ஸ். தல தோனி தலையை நிமிர்த்தவில்லை. முற்றிலும் நம்பிக்கை இழந்த சென்னை ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுகிறார்கள். கடைசிப் பந்து வீசப்படுகிறது. ஃபோர்.  5 ஆவது முறையாக கோப்பையை கைபற்றியது சென்னை . போட்டி முடிந்தபின் பல்வேறு மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசித்தார்கள்.

ஆனால் கதை இது இல்லை. இந்த ஒட்டுமொத்த அனுபவத்தை ரசிகர்களுக்கு இலவசமாக  வழங்கிய  ஜியோ சினிமாவைப் பற்றியது. நேற்று முன் தினம் ஒரு நாளில் மட்டும் ஒரே சமயத்தில் மொத்தம் 3.2 கோடி ரசிகர்கள் ஜியோ சினிமாவில் இந்த ஆட்டத்தை  பார்த்து ரசித்துள்ளார்கள். இதன் மூலம் ஜியோ புதிய சாதனையை படைத்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
Embed widget