மேலும் அறிய

IPL 2023 Playoffs Scenario: 70 சதவீதம் போட்டி முடுஞ்சுது.. ஆனா இன்னும் யாருமே ப்ளேஆஃப்க்கு தகுதி பெறல... என்னதான் நடக்குது ஐபிஎல்லில்..?

IPL 2023 Playoffs Scenario: ஐபிஎல் தொடரில் தற்போது கிட்டத்தட்ட 70 சதவீத போட்டிகளை கடந்து விட்டது. ஆனால் களத்தில் உள்ள 10 அணிகளில் ஒரு அணி கூட இதுவரை ப்ளேஆஃப்க்கு தகுதி பெறவில்லை.

IPL 2023 Playoffs Scenario: ஐபிஎல் தொடரில் தற்போது கிட்டத்தட்ட 70 சதவீத போட்டிகளை கடந்து விட்டது. ஆனால் களத்தில் உள்ள 10 அணிகளில் ஒரு அணி கூட இதுவரை ப்ளேஆஃப்க்கு தகுதி பெறவில்லை. அதேநேரத்தில் அனைத்து அணிகளும் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறும் வாய்ப்புடன் உள்ளது. இந்த நிலை இதுவரை முடிந்த 15 ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட நடைபெறவில்லை. இந்த நிலையால் 10 அணிகளும் கொஞ்சம் பகீர் மனநிலையுடன் தான் உள்ளது. அதே நேரத்தில் 10 அணிகளும் இனி எதிர்வரும் போட்டிகளில் வெல்ல தங்களை முழுமையாக தயார் படுத்திக்கொண்டுள்ளன. 

1. சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் இந்த அணிக்கு மூன்று போட்டிகள் உள்ளது. அதில் டெல்லி அனியுடன் இரண்டு போட்டிகளும் கொல்கத்தாவுடன் ஒரு போட்டியும் உள்ளது. இதில் இரண்டு போட்டிகள் சென்னையிலும், ஒரு போட்டி டெல்லியிலும் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளில் சென்னை அணி மூன்றில் வெற்றி பெற்றால் கட்டாயம் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். 

2. டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி அணி தற்போது 10 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. டெல்லி அணிக்கு மீதமுள்ள நான்கு போட்டிகளில் சென்னை மற்றும் பஞ்சாப்புடன் தலா 2 போட்டிகளில் விளையாட வேண்டும். 

3. குஜராத் டைட்டன்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் உள்ள இந்த அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. மும்பை , ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக மோதவுள்ளது. 

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  

இந்த அணி நேற்று (மே, 8) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற த்ரில் வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது 10 புள்ளிகளுடன் உள்ள இந்த அணி தனக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றால் ப்ளேஆக்குள் நுழைந்து விடும். கொல்கத்தா அணி ராஜஸ்தான், சென்னை மற்றும் லக்னோ அணிகளுடன் தலா ஒரு முறை மோதவுள்ளது. 

5. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணி ஹைதராபாத் , மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 

6. மும்பை இந்தியன்ஸ் 

10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள மும்பை அணி மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விட முடியும். ஆனால் அந்த அணிக்கு மிகவும் சவாலான அணிகளுடன் தான் இனி மோதலே. அதாவது பெங்களூரு, குஜராத், லக்னோ மற்றும் ஹைதராபாத் அணியுடன் தான் மோதலே. இந்த நான்கு போட்டிகளும் மும்பை அணிக்கு சவாலானதாக இருக்கும். 

7. பஞ்சாப் கிங்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நிச்சயம் ப்ளேஆஃப்க்குள் நுழையும். இந்த அணி டெல்லியுடன் இரண்டு முறையும் ராஜஸ்தானுடன் ஒரு முறையும் மோதவுள்ளது. 

8. ராஜஸ்தான் ராயல்ஸ் 

11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இந்த மூன்று போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணி கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுடன் மோதவுள்ளது. 

9. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு

இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள பெங்களூரு அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் ப்ளேஆஃப்க்குள் நுழைந்து விடும். இந்த அணி இனி மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் குஜராத் அணியுடன் மோதவுள்ளது. 

10. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

10 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி. இனி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறும். இந்த அணி லக்னோ, குஜராத், பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுடன் மோதவுள்ளது. 

ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளுக்கும் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறக்கூடிய நிலையில் இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget