மேலும் அறிய

World Cup Warm-up Match: மைதானத்தில் விளையாடும் மழை; இந்தியா இங்கிலாந்து பயிற்சி போட்டியும் ரத்து

ODI World Cup: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது.

World Cup Warm-Up Match: ஐசிசி நடத்தும் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் மிகவும் பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இதற்காக இந்தியாவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, வங்காள தேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் முகாமிட்டுள்ளன. தொடர் தொடங்குவதற்கு முன்னாதாக ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. 

அதில் இந்தியாவுக்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து அணியுடன் பயிற்சி ஆட்டம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பரஸ்சபர மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. 

போட்டிக்கு இரு அணிகளும் தயாராக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து கனமழை பெய்ததால் ஆடுகளம் தார்பாயால் மூடப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் மழை நின்று விடும் இரு அணிகளும் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மைதானத்தில் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். மழை விட்டுவிட்டு பெய்ததால் போட்டி தொடங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர்.

ஒருகட்டத்தில் போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீண்டும் மழை வரவே, போட்டி நேரம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டு வந்தது. இறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. 

ஏற்கனவே நேற்று அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டாஸ் போடப்படாமலே ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃப்ல்ட் சர்வதேச மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. 

இதே மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டாஸ் போடுவதற்கு முன்னர் இருந்தே மழை பெய்ததால் இந்த போட்டியும் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. இறுதில் போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget